Tuesday, February 14, 2017

"இந்தியாவில் மதசார்பின்மையும் சந்திக்கும் சவால்களும்"

2016 ஜனவரி 24-ஆம் தியதி மாலை 4.30 மணியளவில் மார்த்தாண்டம் லெட்சுமி நாராயணா அரங்கில் வைத்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு குமரிமாவட்ட கிளை சார்பாக "இந்தியாவில் மதசார்பின்மையும் சந்திக்கும் சவால்களும்" என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் சிறப்புற கருத்தரங்க உரை நிகழ்த்தினார்.
இன்றைய சமூக சூழல் மற்றும் மதச்சார்பின்மைக் குறித்து மிக சிறந்த கருத்துக்களை வழங்கினார். 
கருத்தரங்கில் பெருந்திரளான மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வந்து கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கு நலக்குழு உறுப்பினரும் இரட்சணிய சேனை அமைப்பின் செயலாளருமான சகோதரர் திரு.Y.ஜான்முர்ரே, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.லீமா ரோஸ், திருவிதாங்கோடு SNOMMT ஜமாஅத் தலைவர் திரு.எம்.எ.நசீர், குழித்துறை நகர்மன்ற தலைவர் திருமதி.எ.டெல்பின், குழித்துறை நகர்மன்ற துணைத் தலைவர் திரு.எம்.மோசஸ் சுதிர் விளவங்கோடு வட்ட துணை அமைப்பாளர் திரு. சி.சசி குமார், மக்கள் நலக்குழு உறுப்பினர்கள் லயன்.எச்.முஹம்மது அலி, சமூக ஆர்வலர் திரு.கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் மற்றும் தக்கலை அப்துல் வாஹித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் மிடாலம் திரு.எம்.எ.சலாம் அவர்கள் தலைமைத் தாங்கினார். விளவங்கோடு வட்ட அமைப்பாளர் திரு.ஜி.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். நலக்குழு மாநில அமைப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.நூர்முஹம்மது அவர்கள் அறிமுகஉரையாற்றினார். நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் ஃபாதர் மரிய வின்சென்ட் அவர்கள் நன்றியுரையுடன் கருத்தரங்கு இனிதே நிறைவுபெற்றது.







No comments:

Post a Comment