Monday, September 28, 2020

எழுச்சித் தமிழருடன் ...

இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு எனது கதை, திரைக்கதை, உரையாடல் மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம் “என்று தணியும்” 

வேல் புரொடக் ஷன்ஸ் சார்பில் அத்திரைப்படத்தைத் திருப்பூர் யுனிவர்சல் திரையரங்க உரிமையாளரும், நான் எப்போதும் அப்பா என்று மதிப்புடனும் பணிவுடனும் அழைக்கும் திரு. கே.பழனிசுவாமி அதைத் தயாரித்திருந்தார். 

முற்றிலும் புதுமுகங்களே நடித்த திரைப்படம். 

படத்தில் ஒருவருக்கும் ஒப்பனை கிடையாது. 

அது உண்மைக் கதை அல்ல, உண்மைகளின் கதை.

தமிழில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகப் பேசிய முதல் திரைப்படம்.

உடுமலை சங்கர், தர்மபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ் போன்ற ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு, இத்திரைப்படத்தை சமர்ப்பிக்கிறோம் என்று நாங்கள் தந்த விளம்பரத்தை எந்த நாளிதழும் வெளியிடவில்லை, தீக்கதிர் தவிர..

அந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு  வந்து சிறப்பிக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழரை நேரில் சந்தித்து அழைத்தேன். 

இலங்கையில் இருந்து அவர் எடுத்து வந்த ஆவணப்படத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் மதிப்புமிகு வாய்ப்பை, எனக்கு மிக முன்னதாகவே அவர் தந்திருந்தார்.

நண்பர்களோடும் தோழர்களோடும் வந்திருந்து சிறப்பித்தார். 

திரைப்படத்தைப் பார்த்தார். மனம் திறந்து பாராட்டினார்.

இத்தருணத்தில் அவர் தந்த அங்கீகாரத்திற்கு மனமார்ந்த நன்றி பாராட்டுகிறேன்.






Friday, September 25, 2020

At Work...



 வாச்சாத்தி ஆவணத் திரைப்படப் படப்பிடிப்பில்...

நன்றியுரை..!


 ராமைய்யாவின் குடிசை ஆவணத் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில்... பாரதி கிருஷ்ணகுமார்  நன்றியுரை..!

Tuesday, September 22, 2020

மருத்துவர் ச. இராமதாசு அவர்களுடன்...

 மதுரையில் இருந்து  இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகத்தின் வழிகாட்டுதலில், மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கிய ஆவணப்படமே “எனக்கு இல்லையா கல்வி..?” 

கல்வி குறித்த ஆவணப்படங்களில் தலை சிறந்தது எனப் பேராசிரியர் ச. மாடசாமி அவர்களால் பாராட்டப் பெற்ற ஆவணம்.

ஆவணப் படத்திற்கென சாட்சியம்  அளிக்குமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மதிப்பிற்குரிய மருத்தவர் ச.இராமதாசு அவர்களைக் கேட்டுக்கொண்டோம்.

தயக்கமின்றி இசைவு அளித்தார். தரமான சாட்சியம் அளித்தார். கல்வி தொடர்பாக மிகுந்த காத்திரமான சிந்தனைகளோடு உரையாடினார். 

அவரைச் சந்தித்த கணங்கள் முக்கியமானவை. 

சந்திப்பை சாத்தியப்படுத்தி, உடனிருந்து ஒத்துழைத்து உதவினார் அருமை நண்பர் கவிஞர். ஜெயபாஸ்கரன்.

இணைந்து பணியாற்றினார் நண்பர் ஷ்யாம்.


v



Monday, September 21, 2020

தென்கச்சி சுவாமிநாதன்

 கும்பகோணம் பள்ளியில் நடந்த துயரமான தீ விபத்துக்குப் பிறகு , தமிழக அரசு மறைத்த உண்மைகளை வெளிப்படுத்தி , ஆவணப்படுத்திய ஆவணத்திரைப்படம் "என்று தணியும் ?"



அது பற்றி அமரர் தென்கச்சி சுவாமிநாதன் எனக்கு எழுதிய மடல் .