Tuesday, August 30, 2011

மரணம் ஒரு தண்டனையல்ல

" கொல்லாமலேயே சாவது மனிதனின் விதி .

மரணத்துக்குப் பயந்தல்ல ; மரணம் ஒரு தண்டனையுமல்ல ;

மானுடகுல மேன்மைக்கேனும் மரண தண்டனை , இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்."


_ த . ஜெயகாந்தன் 

Thursday, August 11, 2011

நன்றி - ஆத்மார்த்தி ரவிசங்கர்.

பாரதி க்ருஷ்ணகுமாரின் எனக்கு இல்லையா கல்வி என்னும் ஆவணப்படத்தை பார்த்தேன்.எனது ஆச்சர்யமெல்லாம் எப்படி ஒரு ஆவணப்படத்தை இவ்வளவு தூரம் உண்மையாகவும் அதே நேரம் செயற்கைத் தன்மை கொஞ்சமும் தோன்றிவிடாமலும் உருவாக்க முடியும் என்பது தான்.

வணப்படம் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் கல்வி இருக்கும் நிலையை மிக அழகாக எடுத்துரைக்கிறது மலைவாழ் மக்கள்,பழங்குடியினர்,ஆதிதிராவிடர்,கிராமப்புற பள்ளிகள் அரசாங்கத்தின் தொடர் அலட்சியம்,குழந்தைகளுக்கு பள்ளிகளில் கிட்டக்கூடிய அசௌகரியங்கள்,தொடர்ந்து வஞ்சிக்கப்படும் கடைநிலை மக்கள்,இன்னமும் அரசாங்கத்தை எதிர்நோக்கி அமைதியான எதிர்பார்ப்பை மட்டும் சுமந்தபடி விழிகளில் கனவுகளைக் கொஞ்சமும் விட்டுக்கொடுத்துவிடாமல் இருக்கும் குழந்தைகள்.

குப்பறைகளின் குறைபாடுகள்,ஆசிரியர்களின் அலட்சியங்கள்,ஆசிரியர் பற்றாக்குறை,அரசின் தொடர் அலட்சியம்,குறைந்து கொண்டே வரும் மாணவர் எண்ணிக்கை,மழை உள்ளிட்ட இயற்கை சீரழிவுகள் கல்வியை பாதித்தல்,சிறார் தொழிலாளர்களாக மாற்றப்படும் மாணவர்களின் படிக்கும் ஆசை.

பெரும்பாலான பள்ளிகளில் சில பாடங்கள் நடத்தப்படாமலேயே ஆய்வுக்கூடம் என்றால் என்ன என தெரியாமலேயே உயர்கல்வியை முடிக்கும் அவலம்,எதிர்கால இந்தியா கிராமங்களை தொடர்ந்து வஞ்சித்து நகர்ப்புற பணக்கார பள்ளியமைப்பை ஊக்குவிக்கும் துரோகம்

சாதிக்கொடுமை,சிலபல ஆசிரியர்களின் மனங்களிலும் இருக்கும் சாதிவெறி,சமச்சீர் கல்வி என்னும் பெயரில் நிறைவேற்றப்படுமா எனத் தெரியாமல் விழிக்கும் பொதுப்பாடத்திட்டம்.சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் பெருமளவு வசிக்கிற பகுதிகளில் இருக்கும் உருதுமொழிவழிக்கல்வியை வழங்கக் கூடிய பள்ளிகள் மெல்ல மெல்ல ஆசிரியக்குறைப்பு செய்யப்படுவதும் அத்தகைய பள்ளிகள் காலவெளியில் குறைக்கப்படுவதும் ஒரு சிறுபான்மை மொழிக்கற்றலை மெல்ல அழிக்கும் செயல் என்பது உள்ளத்தில் உறைக்கிறது.

பாடத்திட்டங்களில் காட்டப்படும் தொடர் அலட்சியம் முதல் ஐந்து வகுப்புக்களுக்குள் பாடங்களை தமிழ் உள்பட அனைத்திலும் உளவியலுக்குச் சம்மந்தமில்லாத அளவுக்கு மாணாக்கர்களின் மண்டைகளில் திணித்துவிடும் மனோபாவம் அழகுற எடுத்துக்காட்டப்படுகிறது

ந்திய தமிழ்நில அளவில் மிக முக்கியமான கல்வியாளர்கள் சமூக சிந்தனையாளர்கள் போராட்டவாதிகள் என முக்கியமானவர்களின் கருத்துக்கள் அனைத்தும் ஆவணமாக்கப்பட்டுள்ள தோழர் பாரதி கிருஷ்ணகுமாஅரின் எனக்கு இல்லையா கல்வி....ஒரு கேமிராவை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட மகோன்னதமான முயற்சி.யாருமே தவற விடக்கூடாத ஆவணப்பாடம்.(படமல்ல.)


            வாழ்த்துவோம்....

Thanks to Deccan Chronicle


நன்றி - புதிய ஆசிரியன்.