Venkatraman Karthikeyan
நண்பர்களுக்கு வணக்கம்..! மாதம் ஒரு இலக்கியப் படைப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டம், அடுத்ததாக கதையாடல் நிகழ்வு என்ற வரிசையில் #வாசகசாலையின் அடுத்த முயற்சியாக இதோ "ஈழத்தமிழர் எழுத்தாளர் வரிசை".
கடலால் மட்டும் அல்ல, கண்ணீராலும் சூழப்பட்டுள்ள இந்த தீவு தேசத்தின், தமிழ் பேசும் நிலப்பரப்பில் இருந்து, மானுடத்தின் எல்லா விழுமியங்களையும் கேள்வி கேட்கும், வாசிப்பவர்களின் மனசாட்சியை கேள்விக்குள்ளாக்கும் இலக்கிய ஆக்கங்கள் நிறைய உண்டு.
ஒரு இலக்கிய அமைப்பாக வாசகசாலைக்கு இத்தகைய ஆக்கங்களுக்கு சிறப்பானதொரு இடமளித்து பேச வேண்டிய கடமையிருப்பதாக கருதுவதன் விளைவே இந்த நிகழ்ச்சி வரிசை. இனி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை "ஈழத்தமிழர் எழுத்தாளர் வரிசை" தொடரும்.
இந்த வரிசையில் முதலாவதாக சமீபமாக வெளியாகி இருக்கின்ற, தமிழ்நதி அவர்களின் "பார்த்தீனியம்" நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாவலை வெவ்வேறு தளங்களில் இருந்து அணுகிப் பேச, தமிழின் மரியாதைக்குரிய படைப்பாளிகள் காத்திருக்கிறார்கள்.வாசகர் பார்வையில் புதிய முகங்களின் பார்வையும் வேறு கோணங்களை உங்கள் முன்வைக்கலாம்.
வாசகசாலையின் ஒன்றரையாண்டுக்கு மேலான பயணத்தில் கண்டிப்பாக இது ஒரு முக்கியமான முன்னகர்வு. எல்லா தருணத்திலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பது நண்பர்கள்தான்.அவர்களுக்கு எப்போதும் போல நன்றிகள் பல.உங்கள் அனைவரையும் நிகழ்விற்கு அன்புடன் வரவேற்கிறேன். மகிழ்ச்சி..!
No comments:
Post a Comment