N.Rathna Vel
சங்கரன் கோவில் – 21.9.2016
நேற்று சங்கரன் கோவில் பரக்கத் திருமண மண்டபத்தில் திரு திருவுடையான் அவர்களுக்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சி.
நேற்று சங்கரன் கோவில் பரக்கத் திருமண மண்டபத்தில் திரு திருவுடையான் அவர்களுக்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சி.
ஜாதி, இனம், மதம், கட்சி வேறுபாடு இல்லாமல் அத்தனை மக்களும் கலந்து கொண்டார்கள். மிகவும் நெகிழ வைத்த நிகழ்ச்சி. மேடையில் இருந்த தலைவர்கள் அத்தனை பேர்களும் கண்ணீருடன், அல்லது கண்ணீரை அடக்க முயற்சி செய்தார்கள்.
கலந்து கொண்ட அத்தனை மக்களும் அப்படியே. மிகவும் நெகிழ வைத்த நிகழ்ச்சி. அவரது குடும்பத்தினரை அருகில் சென்று பார்க்கும் மனதைரியம் எனக்கு இல்லை. அவரது உருவப்படத்தை நிறைய ஓவியர்கள் வரைந்து அஞ்சலி செலுத்தியிருந்தார்கள், அந்தப் படத்தையும் அருகில் சென்று பார்க்கும் மன தைரியமும் எனக்கு இல்லை.
திருநெல்வேலியில் 25.1.15 இல் நடைபெற்ற தெக்கத்தி முகநூல் நண்பர்கள் சந்திப்பிலும், 5.3.16 அன்று நடைபெற்ற திரு கனவுப் பிரியன் அவர்கள் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியிலும் (திரு திருவுடையான் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்) பார்த்திருக்கிறேன். அவ்வளவு திறமைகள் படைத்த அந்தக் கலைஞனின் எளிமை, வெள்ளந்தியான சிரிப்பு மிகவும் ஈர்க்கிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் உள்ள சில படங்கள் பகிர்ந்திருக்கிறேன்.
நேற்றைய நிகழ்ச்சியில் உள்ள சில படங்கள் பகிர்ந்திருக்கிறேன்.
திரு திருவுடையான் அவர்களின் குடும்பத்தினர் இந்தக் கொடுந்துயரிலிருந்து மீண்டு வர அவரது குடும்பத்தினருக்கு மனவலிமை தர என்னை மிகவும் ஈர்க்கும் கோமதி அம்பாளை வேண்டுகிறேன்.
திரு திருவுடையான் அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment