மயிலாப்பூர் இன்று வழக்கத்தை விட அழகாக இருந்தது.. பாரதீய வித்யா பவன் அரங்கின் வெளியே மழை பொழிந்தது.. அரங்கினுள் பாரதி கிருஷ்ணக் குமார் அவர்களின் சொற்பொழிவு .. தொ. மு. சி.ரகுநாதன் அவர்களின் நூல்களுக்கான மறுவாசிப்பு பற்றிய உரை.. அவர் புத்தகங்களின் வாயிலாக கார்க்கியின் 'தாய்' மற்றும் பாரதியாரைப் பற்றிய, இதுவரை அறிந்திராத பல தகவல்களை BK sir அவருக்கே உரிய உணர்ச்சிகரமான உரை ஆற்றலின் வழியாக நம்முடன் பகிர்ந்து அவர்கள் உலகத்துக்கே அழைத்துச் சென்றார். பார்வையாளர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மந்திரத்தில் கட்டுண்டதைப் போல அமர்ந்திருந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ? அருமையான உரை..காதில் கணீரென்று அவர் குரலும் மனதில் அவர் உரையின் தாக்கமும் இப்பவும்..
No comments:
Post a Comment