Monday, April 27, 2020

தாய்ப் புத்தகம்



ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி தினமாகக் கொண்டாடப்படுகிறது(World Earth Day).

ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது(World Book Day).

உண்மையில் பூமியே புத்தகங்களுக்கெல்லாம் புத்தகம்.

அதுதான் தாய்ப் புத்தகம்.

அதிலிருந்து தான் உலகின் எல்லா மொழிப் புத்தகங்களுக்குமான காகிதமும்,மசியும்,கருத்தும் கிடைக்கிறது.

மனிதன் எப்போதும் பாதுகாக்க வேண்டிய,படித்துக்கொண்டே இருக்க வேண்டிய,படித்து முடிக்கவே முடியாத ஒரே புத்தகம் இந்த பூமி மட்டுமே.

பிரபஞ்சம் என்னும் பெரும் நூலகத்தில் நாம் வாழவும் வாசிக்கவும் வசிக்கவும் அனுமதிக்கப்பட்ட ஒரே புத்தகமும் இந்த பூமி மட்டுமே.

-பாரதி கிருஷ்ணகுமார்.   


No comments:

Post a Comment