Sunday, May 10, 2020

அன்னையர் தினம்.

இன்று அன்னையர் தினமாம் . ஒரு தினம் மட்டுமா உன்னுடையது . இந்தப் பிறப்பே உன்னுடையது .

Image may contain: one or more people, people sleeping, baby and close-up

நீ சொன்னது தான் நடந்தது அம்மா


பொறுப்பற்றவனாக
பிழைக்கத் தெரியாதவனாக
கோழையாக, கஷ்டம் தெரியாதவனாக,

சம்பாதிக்கத் துப்பில்லாதவனாக
வீட்டுக்குப் பயனில்லாதவனாக,
போதையில் திரிபவனாக,

தன்னிலை இழந்து தெருவில் கிடப்பவனாக
சோத்துக்குச் சிங்கி அடிக்கிறவனாக
போலீஸ் வீட்டுக்குத் தேடி வருகிற புள்ளியாக,

பெண் பித்தனாக
சொத்தெல்லாம் வித்து வீதிக்கு வருபவனாக
ஏமாளியாக, ஏழையாக,

எந்தச் சொந்தக்காரனும் சேர்த்துக் கொள்ளாதவனாக
ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவனாக
வேலை பார்த்தும் கூலி பார்க்கத் தெரியாத மூடனாக,

நான் ஆவேன் என்று

மற்றவர்கள் சொன்னதெல்லாம்
பொய்த்து,

நீ சொன்னது தான் நடந்தது அம்மா.


- ப்ரகலாதன்
(பாரதி கிருஷ்ணகுமார்)

No comments:

Post a Comment