Wednesday, February 7, 2018

ஒளி பொருந்திய மா மனிதர் .நபிகள் நாயகம்

வரலாற்றில் ஒளி பொருந்திய மனிதர் 
நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு வலைக்கும் .
என் மனம் கவர்ந்த மா மனிதர் ...

ஒரு நிகழ்வில் இப்படிச் சொன்னேன் .

நிகழ்வில் பங்கேற்ற சமரசம் இதழின் ஆசிரியர் அன்புச் சகோதரர் அமீன் 
என்னிடத்தில் வந்து என் கைகளைப் பேரன்புடன் பற்றிக்கொண்டு 
சொன்னார் ... " அண்ணலை ஒளி பொருந்திய மனிதர் என்று , வேறு எவர் சொல்லியும் நான் கேட்டதில்லை . நீங்கள் தான் அப்படிக் குறிப்பிடும் முதல் மனிதர் என்றார் .

ஆம் .... அவரது வரலாற்றை வாசிக்கும்போது , அந்தப் புத்தகத்தின் பக்கங்களில் , வாசிக்கறவனின் மனதில் ஒளி உண்டாக்கும் வாழ்வு அவருடையது . 

ஒளி பொருந்திய மா மனிதர் அவர் .