Thursday, February 1, 2018

அதிராமபட்டினத்தில் ...





மேனாள் நீதியரசர்  சம்பத் அவர்களுடன் ... கும்பகோணம் பள்ளியில் நடந்த தீய தீ விபத்து குறித்து அரசு நியமித்த விசாரணைக் கமிஷனின் தலைவராக  இருந்தார் திரு . சம்பத் .

அந்தக் கொடூரமான படுகொலை குறித்து ஒரு ஆவணப்படத்தை " என்று தணியும் ? " என்ற தலைப்பில் நான் எடுத்திருந்தேன் ...

அவரது விசாரணைக் கமிஷன் அறிக்கையின் சில பகுதிகளை எனது ஆவணப்படத்தில் குறிப்பிட்டு இருந்தேன் . அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன் . மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் .  ஆனால்

'மிக மிக முக்கியமான ஒரு ஆவணம் மட்டும் உங்கள் அறிக்கையில் இடம் பெறாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தம் தந்தது " என்றேன் .
அதென்ன  ஆவணம் என்று கேட்பது போலப் பார்த்தார் . சொன்னேன் .

"ம்"   என்றார் .

அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை .

முன்னதாக ஆவணப்படத்தின் பிரதியை அனுப்பச் சொன்னார் .
நானும் சம்மதம் சொல்லி இருந்தேன் .

ஆனால் , அந்த " ம்" க்குப் பிறகு நான் அனுப்ப விரும்பவில்லை .
அவரும் கேடகவில்லை .










 அதிராமபட்டினம் , காதர் மொஹிதீன் கல்லூரியின் நிறுவனர் நாள் மற்றும் கல்லூரி தின விழாவில் ....