Wednesday, February 14, 2018

எழுச்சித் தமிழருடன் ...















என்று தணியும் ... எனப் பெயரிடப்பட்ட எனது கதை , திரைக்கதை , உரையாடல் மற்றும் இயக்கத்தில் உருவான,
ஒரு முழு நீளத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அழைப்பதற்காக,
எழுச்சித் தமிழர் தோழர் . திருமாவளவனை
நேரில் அழைக்க ஒரு காலையில் அவரது இல்லத்திற்குப் போயிருந்தோம் . 

அருமை நண்பரும் , ஆவணப்பட இயக்குனருமான ஆளூர் ஷாநவாஸ் 
தான் அதற்குரிய ஏற்ப்பாடுகளைச் செய்திருந்தார் .

காலையிலும் மிக அதிகமான பார்வையாளர்கள் காத்திருந்தார்கள் .

பரபரப்பான பணிகளுக்கு இடையிலும் மிகுந்த நேரம் ஒதுக்கி , நீண்ட நேரம் எங்களோடு உரையாடினார் .

திரைப்படம் பார்க்க வருவதாக உறுதி தந்தார் .
அதன்படியே வந்து சிறப்பித்தார் .

நான் அவர் மீதும் , அவர் என் மீதும் பரஸ்பரம்   எப்போதும் மதிப்பும் , அக்கறையும் கொண்டிருப்போம் . 

அவர் தனது உடல்நலத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என்று எப்போதும் அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் .

அவர் தமிழ்நாட்டுக்குத் தேவை .