Tuesday, February 26, 2013

. . . எதுவும் உயர்ந்தது இல்லை

ரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு கும்பகோணத்திற்குப் போய் இருந்தேன் .

னது தயாரிப்பிலும் , இயக்கத்திலும் உருவான " என்று தணியும் ?" ஆவணத் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக .

 ரண்டாயிரத்து நான்காம் ஆண்டு  ஜூலை மாதம் பதினாறாம் நாள் விபத்து நடந்து  94  குழந்தைகள் அநியாயமாக எரிந்து , இறந்து போன துயர நிகழ்வின் பின்னே இருக்கும் உண்மைகளை உலகிற்கு சொல்லுவது எனது நோக்கம் .

ந்தக் குழந்தை அந்தப் பள்ளியில் படித்து , முதுகில் கடுமையான
 தீக் காயங்களோடு உயிர் பிழைத்தவன் .

குழந்தையோடு மெதுவாக உரையாடி , அவனது சாட்சியத்தைப் பதிவது
எனது வேலைத் திட்டம் . அவனது பெற்றோர்கள் சம்மதம் தந்து இருந்தார்கள் .
ஆனால் , அந்த நினைவுகளுக்குள் போகக்  குழந்தை தயங்கியதும் , நான் உரையாடலை வேறு திசைக்கு மாற்றிக் கொண்டேன் .

டலில் தீப்புண் சுமக்கும் குழந்தையின் மனதில், இந்த நினைவூட்டல் மீண்டும் ஒரு காயமாகி விடும் என்று உணர்ந்து கொண்டேன் .

குழந்தை மிகுந்த மகிழ்ச்சியோடு என்னோடு , என் மடியில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தான் .

வனது மன நிலையை விட , மகிழ்ச்சியை விட எதுவும் உயர்ந்தது இல்லை .

துயரம் நிரம்பி வழிந்த அந்த நாட்களில் , இந்தக் குழந்தையோடு இருந்த தருணங்கள் மறக்க இயலாதது .

1 comment:

Selvaraj said...

எதுவும் உயர்ந்தது இல்லை ..அன்பைத் தவிர ..

Post a Comment