Tuesday, March 5, 2013

கனவு மெய்ப்பட வேண்டும் .

 எனது முதல் ஆவணத் திரைப்படமான ராமையாவின் குடிசை கீழ வெண்மணி குறித்த வரலாறு .

அது குறித்த ஒரு விமர்சனத்தை தான் நடத்தி வந்த "திரை " மாத இதழில் பிரசுரித்து என்னைச் சிறப்பித்தார் கவிஞரும் , அன்புத் தோழியுமான லீனா மணிமேகலை .

காத்திரமான ஒரு விமர்சனத்தை எழுதி இருந்தார் பேராசிரியரும் , தோழருமான அ. மார்க்ஸ் .

இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி . 

இந்த ஆவணத் திரைப்படம் தொடர்பாக எழுதப்பட்ட , பேசப்பட்ட அனைத்து வகையான விமர்சனங்களுக்கும் , பாராட்டுதல்களுக்கும் , வசவுகளுக்கும் , நான் இது வரை எந்த பதிலும் சொல்லவில்லை .

ஆனால் ,அவைகளுக்கு விடை சொல்லும் முகத்தான் கீழ வெண்மணி குறித்த ஆவணப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம் . அதற்குத் தேவையான எல்லா ஆவணங்களும் , தரவுகளும் என்னிடம் உள்ளன . ஆவணப் படத்தில் காட்சிப் படுத்த இயலாதவற்றை ஒரு புத்தகமாக எழுதி , அதனுடன் ஆவணப் படத்தை இணைத்துத் தர வேண்டும் என்பதும் எனது திட்டம் .

மிகுந்த நேரமும், உழைப்பும் , பொருளும் தேவைப்படுகிற காரியம் அது . எனது பெருங் கனவுகளில் இதுவும் ஒன்று ,
கனவு மெய்ப்பட வேண்டும் . கனவுகள் மெய்ப்படுகிற காலம் வரை, அவைகளின் வெப்பம் குறையாது மனசுக்குள் அடை  காக்கத்தான் வேண்டும்


1 comment:

ilangovan thayumanavar said...

மெய் பேசும் எல்லாமும் மெய்ப்படும்..
இரண்டாம் தடவையாக உருகக் காத்திருக்கிறோம்..

Post a Comment