Wednesday, February 20, 2013

படிக்கற்கள் உயரம் போக உதவும் .

நான்காயிரத்து இருநூறுக்கும் அதிகமான மாணவர்கள் .
அரங்கு நிறைந்து கிடந்தது .


கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் பள்ளி மாணவர்கள் .
மிகுந்த பொருட் செலவில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்த படிக்கற்கள் என்னும் தனித்துவமான நிகழ்வு . நாளிதழ்களில் விளம்பரங்கள். ஊரெங்கும் விளம்பரப் பலகைகள் .
வந்திருந்த எல்லோருக்கும் தங்குமிடம் , உணவு , உபசரிப்பு என எல்லாமே விரிவாக , சிறப்பாக நடந்தது .


ங்கு பெற்ற ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள் .
நிச்சயம் பலருக்குப் பயன் தந்திருக்கும் என்பதை அப்போதே அனுபவத்தில் அறிந்து , உணர்ந்து கொள்ள என்னால் முடிந்தது .

பெரும் சந்தடியும் , கூச்சலுமாக இருந்த அரங்கில் உருவான அமைதியும் , அவதானிப்பும் அதை உறுதி செய்தன .

பேசத்தான் அழைக்கிறார்கள் .
சும்மா கடனுக்குக் காமெடி பண்ணிப் பேச நாம் எதற்குப் போகவேண்டும் ?
உயிரை உருக்கி , உணர்வைப் பெருக்கி , உண்மைகளை உணர்த்திப் பேசுகிற   ஒரு பேச்சால் மட்டுமே ஒரு தலைமுறையை உருவாக்க இயலும் . அதை நிகழ்த்துவதே நமது கடமை .

டிக்கற்கள்  உயரம் போக உதவும் .
ஆனால் ... படிக்கற்களையே உருவாக்க விரும்புகிறவர்கள் படுகிற பாடு அதில் ஏறிப் போகிறவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை . தெரிய வேண்டுமென்பதுமில்லை . ஏறிப் போனால் சரி .

No comments:

Post a Comment