சின்ன வயதில் வாடகைக்கு சைக்கிள் எடுத்திருக்கிறேன் .
பிறகு கார் , வேன் , பஸ் வரைக்கும் வாடகைக்கு எடுத்திருக்கிறேன் .
ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்ததும் , அது நான்கு நாட்கள் எங்களோடு இருந்ததும் எனக்கு தாங்க முடியாத சந்தோசம் .
ரயில் எப்போதும் சந்தோசமான ஒரு அற்புதம் .ரயில் பயணம் எனக்கு மிக மிக உவப்பானது . எத்தனை விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் , எந்த நூற்றாண்டிலும் ஓடுகிற ரயிலைப் பார்த்துக் கண்கள் விரிய கை அசைத்துப் புன்னகைக்கிற ஒரு குழந்தை எல்லா நாட்டிலும், எல்லா ஊரிலும் இருக்கும் .
அந்தக் குழந்தையின் மனம் தான் எனக்கு ரயிலோடு .
No comments:
Post a Comment