Thursday, February 21, 2013

அனைவருக்கும் சென்று சேரட்டும்

அறிவிக்கப்பட்ட விருதுகளை ஜனவரி இருபத்திஆறாம் நாள் மாலை திருப்பூர் புத்தகத் திருவிழாவில் , பொது அரங்கில் வழங்கிச் சிறப்பித்தது திருப்பூர் தமிழ் சங்கம் .

இரண்டாயிரத்துப் பதினோராம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைக்கான விருதை எனது முதல் தொகுப்பான "அப்பத்தா" பெற்றது .

நடுவர் குழுவின் சார்பில் பேசிய கவிஞர் . ஆண்டாள் பிரியதர்சினி தேர்வு செய்யப்பட்ட அனைத்துப் படைப்புகள் குறித்தும் விரிவாகப் பேசிப் படைப்பாளிகளை சிறப்பித்தார் .

எனது கதைகள் குறித்துச் சொல்லும் பொழுது ,"அப்பத்தா எப்போதும் தன்னுடன் , தன் நினைவில் வாழ்வதாகக் குறிப்பிட்டார் .

பரிசு பெற்றவர்கள் சார்பில் நன்றி சொல்லும் பொழுது நான் சொன்னேன்.
" மிக நீண்ட நமது மொழியின் வரலாற்றில் நமக்கு முன்னே எழுதிய, எழுதுகிற படைப்பாளிகளுக்குத்தான் எல்லாப் புகழும் , பெருமையும் உரியது .அவர்களே நம்மை எழுதப் பணித்தார்கள் . அவர்களுக்குச் சொல்லுகிற நன்றி அனைவருக்கும் சென்று சேரட்டும்" என்றேன் .


4 comments:

kamaraj said...

வாழ்த்துக்கள் bk

Unknown said...

VERY GLAD BK,about the Award! Congratulations!
And,this is the first time I see you in a dhoti..It looks good,too.
And I see a few familiar names in the list..Murugesh( of Arivoli days ) and Dr Valan Arasu,a former colleague at St John's way back in 1970 - 1971..it adds to my happiness..

SAKTHI said...

Vazhththukal BK Sir

SAKTHI said...

வாழ்த்துகள் BK Sir

Post a Comment