Friday, December 20, 2019

தாமரைக்கரை - சமூக அறிவியல் பள்ளி - ஆதிக்குடில் நிகழ்வுகள்





 "நாமும் இலக்கியங்களும்" என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் பேசிக் களித்தோம் . தோழர்கள்  வி . பி . ஜி , அன்புராஜ் , கலைக்கோவன் , பேராசிரியர் பாரதி , பொறியாளர்கள் பிரேம் , ஸ்ரீ      என எனது உள்ளம் கவர்ந்த நண்பர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர் . மலைவாழ் மக்களில் சிலரும் எங்களோடு உரையாடலில் இணைந்தனர் .


தாமரைக்கரை அழகு ததும்பும் பர்கூர் மலைப்பகுதி .பகலும் இரவும் பனி படர்ந்து அலைந்து கொண்டே இருந்தது .

மக்கள் மாசற்ற மனிதர்கள் . நொடிகளில் , நிபந்தனை இன்றி அன்பு செலுத்தினார்கள் .

தங்கி இருந்த இடத்திற்குப் பக்கத்தில் , முந்தின இரவில் வந்துபோன ஒற்றை யானையின் காலடித்தடம் காட்டினார்கள் . பெரிய மரவைத்தட்டு போல இருந்தது அதன் காலடித்தடம் . ஈர மண்ணில் தனது வருகையை சொல்லிவிட்டுப் போயிருந்தது அந்தப் பேருயிர் .

நிறையப் பேசினோம் . நிறையச்  சிந்தித்தோம் . நிறையச்  சிரித்தோம் .

இரண்டு நாட்களும் எந்த அலைபேசியும் பேசவில்லை .
தொடர்பு எல்லைக்கு வெளியில் கிடந்தோம் .
சொல்லி மாளாத சந்தோசம் .

எல்லோருடனும் பேசுவதற்கு என்றே கண்டு பிடிக்கப்பட்ட அலைபேசிகள் , யாரையும் யாரோடும் பேசாமல் செய்து விட்டது விந்தை தான் .

அந்த மக்கள் சமைத்த, அன்பினால் குழைந்த உணவைத்தான் இரண்டு நாட்களும் மனம் நிறையச் சாப்பிட்டோம் .

தூய்மையான மனிதர்கள் , கலப்படமில்லாத காற்று , அரவணைத்துக்கொண்டே இருக்கும் இளம் பனி ,


தாமரைக்கரை  மனமெங்கும் பூத்துக் குலுங்குகிறது .