Friday, March 8, 2013

ஊர் கூடி இழுத்த தேர் அது

தமிழ்நாட்டில் இன்றைக்கு சமச்சீர் கல்வி அமலில் இருக்கிறதென்றால் அதற்கு தமிழக அரசு ஒரு போதும் காரணமல்ல .

சமச்சீர் கல்வி உருவாக வேண்டுமென மிக நீண்ட காலமாகப் போராடிய சில கல்வியாளர்களும், சில மனித உரிமைப் போராளிகளும், அவர்களது இயக்கங்களுமே அந்தப் பெருமைக்கு உரியவர்கள் .

அந்த மகத்தான இயக்கத்திற்குப் பங்களித்தவர்களில் பத்திரிகையாளர் திரு . சாவித்திரி கண்ணனுக்கும் காத்திரமான பங்குண்டு .கல்வி குறித்த அசலான அக்கறையோடு நிறைய கட்டுரைகளை எழுதியவர் .

சமச்சீர் கல்வி அமலாக்கத்தில் தடைகளும் , தடுமாற்றங்களும் பெருகி இருந்த சமயத்தில் ,காலத்தின் தேவை உணர்ந்து ஒரு புத்தகத்தை எழுதிப்பிரசுரித்து சமச்சீர் கல்வி வருவதற்கான பொதுக் கருத்தை உருவாக்கப் பங்களித்த பெருமையும் அவர்க்குண்டு .அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்துச் சிறப்பித்தார் .




 " எனக்கு இல்லையா கல்வி ?" என்னும் ஆவணப் படத்தை  அந்தத் தருணத்தில்  இயக்கியதன் மூலம் எனக்கும் அந்த மகத்தான திருப்பணியில் பங்குண்டு

ஊர் கூடி இழுத்த தேர் அது . அதில் எனது கைகளும் இணைந்து  இருக்கிறது என்பது என் வாழ்நாள் பெருமிதங்களில் ஒன்று .


No comments:

Post a Comment