தாய் மொழியான தமிழின் தனிப் பெருமைகளையும் ,சிறப்புகளையும் அவர்களுக்கு எடுத்துரைத்தேன் . மருந்துகளை விட, குணப்படுத்தும் ஆற்றல் மொழிக்கு உண்டு என்பதை அனுபவ உண்மைகளால் விளக்கினேன் .
வட கிழக்கு சீனாவில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான சீனர்களும் , ஆப்பிரிக்கக் கறுப்பின நீக்ரோப் பழங்குடி மக்களும், அந்தமான் நிகோபார் தீவுகளில் வாழும் ஆதிவாசிகளும் , தமிழ் நாட்டில் வாழும் பளியர் இனத்தைச் சேர்ந்த மலை வாழ் மக்களும் என உலகின் மக்கள் தொகையில் எழுபது சதவிகிதத்திற்க்கும் அதிகமான மக்கள் தங்கள் மண் சார்ந்த மருத்துவ முறைகளையும் , மருந்துகளையும் தான் இன்றைக்கும் பயன் படுத்துகிறார்கள் . அவர்களுக்கும் அலோபதி மருத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது . தங்கள் உடல் நலக்குறைவிற்காக அவர்கள் ஒரு "பேரா சிட்டமால்" மாத்திரை கூடச் சாப்பிட்டது இல்லை .
அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்தோடும் , ஆயுளோடும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் . எனவே மருத்துவர்கள் இல்லாமல் மக்களால் வாழ முடியும்.
மக்கள் இல்லாமல் மருத்துவர்களால் வாழ முடியாது என்றும் அவர்களுக்குச் சொன்னேன் .
அதிலும் , சிறப்பு மருத்துவம் என்கிற பெயரில் மனித உடலைக் கூறு போட்டு சிகிச்சை செய்யும் முறை உலகின் மிகப் பெரிய மருத்துவ மேதைகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்கிற உண்மையையும் எனது உரையில் குறிப்பிட்டேன் . இப்படியே போனால் வலது காதுக்கு ஒரு மருத்துவரும் , இடது காதுக்கு ஒரு மருத்துவரும் என்கிற அளவுக்கு மருத்துவம் வணிகமாகி வருவதையும் எடுத்துரைத்தேன் .
மனித உயிரின் விலையை விடவும் , மருந்தின் விலை அதிகமாகி விட்ட இன்றைய உலகச் சூழ்நிலைமையில் மருத்துவத்திற்க்கே மருத்துவம் தேவைப்படுகிறது என்றும் அவர்களுக்குச் சொன்னேன் .
1 comment:
மருந்து போன்றவை உங்கள் வார்த்தைகள்.
Post a Comment