இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு எனது தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவானது கீழவெண்மணி குறித்த ஆவணத் திரைப்படம் .
கூலியாக அரைப்படி நெல் அதிகம் வேண்டுமெனப் போராடிய எளிய , ஏழை விவசாயக் கூலிகளை ஒடுக்க எல்லா வகையான அடக்குமுறைகளையும் ஏவி விட்டது அரசும் , போலீஸ்காரர்களும் , நிலப் பிரபுக்களும் இணைந்த, புனிதமற்ற, கள்ளக் கூட்டணி .
அதன் உச்சமாக , நாற்பத்தி நான்கு பேரை தீயிட்டுக் கொளுத்தியது அந்தக் கொலைகாரக் கும்பல் . இருபது பெண்கள் , பத்தொன்பது குழந்தைகள் , ஐந்து முதியவர்கள் என நாற்பத்தி நான்கு உயிர்கள்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி எட்டாம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் நடைபெற்ற படுகொலை அது . அவர்கள் அஞ்சி ஒடுங்கி இருந்த குடிசை ராமையா என்பவருக்குச் சொந்தமானது . அது பற்றியே ஆவணத் திரைப்படத்திற்கு "ராமையாவின் குடிசை" எனப் பெயர் இட்டேன் .
அந்த ஆவணத் திரைப்படத்தின் உருவாக்கத்தின் பொருட்டு , இரண்டு ஆண்டுகள் ஒன்று பட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்தேன் . போகாத கிராமமில்லை . சந்திக்காத மனிதர்கள் இல்லை . ஒரு பெரும் தேடல் அது . அந்த அனுபவங்கள் தனியே எழுதத் தக்கவை .
அந்தத் தேடலின் ஊடே , ஒரு நாள் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ் சாலையில் , மாவூர் என்ற சிறிய கிராமத்தின் எல்லையில் , இடது புறம் போகிற ஒரு சிறிய பாதையின் உள்ளே இந்த அய்யனார் இருந்தார் .
அந்த மாவட்டத்தில் முன்பு நிலவி இருந்த அதிகாரத்தின் , அடக்குமுறையின் வடிவமாக எனக்கு அந்த அய்யனார் தென்பட்டார் . தரையில் அமர்ந்து, மேல் நோக்கிய கோணத்தில் அவரைப் படம் பிடித்தேன் . இந்த வண்ணத்தில் அவர் இருக்கவில்லை . வடிவமைப்பில் இந்த வண்ணத்தை அவருக்குத் தந்தோம் .
ஆவணத் திரைப்படம் வருவதை முன்னறிவிக்கும் பிரசுரத்தில் அய்யனார் இடம் பெற்றார் . மிகுந்த பாராட்டைப் பெற்றார் அய்யனார் . அதற்குப் பிறகு, எங்கள் அனுமதியின்றி பலர் அவரைப் பயன் படுத்திக் கொண்டதையும் நான் பார்த்திருக்கிறேன் .
அதற்குப் பிறகு, அதே சாலையில் பல முறை பயணம் செய்தும், அவரைப் பார்க்கப் போக வாய்க்கவில்லை . எனக்கு அது ஒரு மனக் குறை தான் . அந்த வருத்தம் அய்யனாருக்கும் இருக்கக் கூடும் . அடுத்த முறை அந்தப் பாதையில் பயணித்தால்அவசியம் வருகிறேன் அய்யனாரே .... அது வரை பொறுத்தருளும் .
கூலியாக அரைப்படி நெல் அதிகம் வேண்டுமெனப் போராடிய எளிய , ஏழை விவசாயக் கூலிகளை ஒடுக்க எல்லா வகையான அடக்குமுறைகளையும் ஏவி விட்டது அரசும் , போலீஸ்காரர்களும் , நிலப் பிரபுக்களும் இணைந்த, புனிதமற்ற, கள்ளக் கூட்டணி .
அதன் உச்சமாக , நாற்பத்தி நான்கு பேரை தீயிட்டுக் கொளுத்தியது அந்தக் கொலைகாரக் கும்பல் . இருபது பெண்கள் , பத்தொன்பது குழந்தைகள் , ஐந்து முதியவர்கள் என நாற்பத்தி நான்கு உயிர்கள்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி எட்டாம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் நடைபெற்ற படுகொலை அது . அவர்கள் அஞ்சி ஒடுங்கி இருந்த குடிசை ராமையா என்பவருக்குச் சொந்தமானது . அது பற்றியே ஆவணத் திரைப்படத்திற்கு "ராமையாவின் குடிசை" எனப் பெயர் இட்டேன் .
அந்த ஆவணத் திரைப்படத்தின் உருவாக்கத்தின் பொருட்டு , இரண்டு ஆண்டுகள் ஒன்று பட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்தேன் . போகாத கிராமமில்லை . சந்திக்காத மனிதர்கள் இல்லை . ஒரு பெரும் தேடல் அது . அந்த அனுபவங்கள் தனியே எழுதத் தக்கவை .
அந்தத் தேடலின் ஊடே , ஒரு நாள் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ் சாலையில் , மாவூர் என்ற சிறிய கிராமத்தின் எல்லையில் , இடது புறம் போகிற ஒரு சிறிய பாதையின் உள்ளே இந்த அய்யனார் இருந்தார் .
அந்த மாவட்டத்தில் முன்பு நிலவி இருந்த அதிகாரத்தின் , அடக்குமுறையின் வடிவமாக எனக்கு அந்த அய்யனார் தென்பட்டார் . தரையில் அமர்ந்து, மேல் நோக்கிய கோணத்தில் அவரைப் படம் பிடித்தேன் . இந்த வண்ணத்தில் அவர் இருக்கவில்லை . வடிவமைப்பில் இந்த வண்ணத்தை அவருக்குத் தந்தோம் .
ஆவணத் திரைப்படம் வருவதை முன்னறிவிக்கும் பிரசுரத்தில் அய்யனார் இடம் பெற்றார் . மிகுந்த பாராட்டைப் பெற்றார் அய்யனார் . அதற்குப் பிறகு, எங்கள் அனுமதியின்றி பலர் அவரைப் பயன் படுத்திக் கொண்டதையும் நான் பார்த்திருக்கிறேன் .
அதற்குப் பிறகு, அதே சாலையில் பல முறை பயணம் செய்தும், அவரைப் பார்க்கப் போக வாய்க்கவில்லை . எனக்கு அது ஒரு மனக் குறை தான் . அந்த வருத்தம் அய்யனாருக்கும் இருக்கக் கூடும் . அடுத்த முறை அந்தப் பாதையில் பயணித்தால்அவசியம் வருகிறேன் அய்யனாரே .... அது வரை பொறுத்தருளும் .