பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது . அரங்கு நிறைந்த மிகப் பிரம்மாண்டமான நிகழ்வு .
உணர்ச்சிப் பெருக்கும் , தோழமை உணர்வும் அரங்கு முழுவதும் ததும்பி நின்றது .
வந்திருந்த பார்வையாளர்கள் வரிசையில் நின்று ஆவணப் படத்தின் பிரதிகளை வாங்கியதை , மிகுந்த பெருமித உணர்வுடன் பார்க்க எனக்கு வாய்த்தது .அன்றே ஐநூறு பிரதிகள் விற்றுத் தீர்ந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் அருமைத் தோழர் பிரகாஷ் காரத் ஆவணப் படத்தை இயக்கியமைக்காக ஒரு அழகிய நினைவுப் பரிசினை உவந்து அளித்தார் . பரிசளித்த அவருக்கும் , பரிசினைத் தேர்வு செய்த தமிழ் நாடு மலை வாழ் மக்கள் சங்கத்திற்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி
ஒரு மலை வாழ் சிறுவனின் தோளில் அமர்ந்திருக்கும் அந்தப் புறா
நம்பிக்கையோடும் , அன்போடும், பாதுகாப்பு உணர்வோடும் காணப்படுகிறது.
இப்போது அந்தச் சிறுவன் எனக்கு தமிழ் நாடு மலை வாழ் மக்கள் சங்கமாகவும் , நான் அந்தப் புறாவாகவும் இருக்கிறோம் .
No comments:
Post a Comment