Thursday, April 11, 2013

தலை வணங்கி ஏற்றுக் கொள்ளுகிறேன்

எப்போதும் என் மதிப்பிற்குரியவர் திரு . திருப்பூர் கிருஷ்ணன்
அவரது பண்பும் ,பாங்கும் மகத்தானவை.
அமுதசுரபி தமிழ் மாத இதழின் ஆசிரியர் .
எனது "கிணறு " என்னும் சிறுகதையை அமுதசுரபி இதழில் வெளியீட்டு ,
எனக்குப் பெருமை சேர்த்தவர்.


புகழுக்கு மனிதர்கள் மயங்கலாகாது என்பதையும்  நான் அறிந்திருக்கிறேன் .
ஆனால் , சில புகழுரைகள் உங்களை மேலும் பொறுப்பும் , தெளிவும் பெறச் செய்து விடுகின்றன . இது அத்தகையது என்பது என் தீர்க்கமான முடிவு.


அவர் என்னைப் பாராட்டி எழுதி இருப்பதை மிகுந்த பெருமிதத்துடன் நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் .
பாராட்டுவது யார் என்பதில் தான் பாராட்டுக்கான மரியாதை இருக்கிறது .
எனக்குத் தெரியும் .
இது மிகுந்த மரியாதைக்குரிய பாராட்டு.
இதனைத் தலை வணங்கி நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் .

No comments:

Post a Comment