Wednesday, January 22, 2020

சுளுந்தீ நாவல் அறிமுக நிகழ்வு - தேனி - பகுதி இரண்டு

 சமூக நல்லிணக்கப் பேரவை 



 நாவல் என்னை ஈர்த்தது .

எழுத்தெண்ணிப் படித்தேன் .இந்தப் படைப்பு கொண்டாடப்பட வேண்டிய படைப்பு என்று ஸபிக்கு சொன்னேன் . அதனால் தான் உங்களுக்கு அனுப்பினேன் என்றார் .

தான் தலைமை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும் "சமூக நல்லிணக்கப் பேரவை  " என்னும் அமைப்பின் மூலம் நாவலுக்கான அறிமுகக் கூட்டத்தை நடத்தினார் .

அரங்கம் நிறைந்த கூட்டம் . அரங்கில் பேசிய எல்லோரும் சிறப்பாகப் பேசினார்கள் . அந்த நாவலுக்கு என்று நடந்த முதல் நிகழ்வு என்கிற பெருமையை நாங்கள் அனைவரும் பெற்றோம் .

தேனி இந்து நாடார் உறவின்முறைக் கல்விக்கூடங்களின் பொதுச்செயலாளர் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு .டி . ராஜ்மோகன் நிகழ்வுக்குத் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார் . அழைப்பிதழைப் பார்த்தால் அறிந்து கொள்வீர்கள் . பல் துறை சார்ந்த பெருமக்கள் திரளாகப் பங்கேற்று பெருமை சேர்த்தார்கள் .

இப்போது நிறைய விருதுகளையும் , பரிசுகளையும் இந்தப் படைப்பு பெற்றிருக்கிறது .

வாங்கி வாசியுங்கள் . ஒரு வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கும் பாங்கை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் .

படைப்பும் , படைப்பாளர்களும் கொண்டாடப்படுவது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்குப் பேருதவி செய்யும் .

சமூக நல்லிணக்கப் பேரவையும் , அதன் அழைப்பை ஏற்றுத் திரளாக வந்த பெருமக்களையும் நான் வாழ்த்துகிறேன் .




 https://youtu.be/7apCj6R0MQ8
இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் .