Friday, May 4, 2018

ஆண்டவர் & கோ ... நாமக்கல்






 எனக்கு இடதுபுறம் இருப்பவர்  எம் . கே . வீ   என்று,  நாமக்கல் மக்களால் எப்போதும் அன்போடு அழைக்கப்படும்   திருமிகு . எம் . கே . வெங்கடாசலம் அவர்கள் . 

நாமக்கல் நகரத்தின் மிக மூத்த தொழில் முனைவர் . நாமக்கல் நகரத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் .

நாமக்கல் கவிஞர் விழாவில் அவரைச் சந்தித்தேன் .
முதல் சந்திப்பு .

மிகச் சிறிய உரை ஒன்றை நிகழ்த்தினார் .

உண்மையின் ஒளியோடு அமைந்த பேச்சு . 

அந்தக் கணமே , அவரைப் பாராட்டினேன் . 
எளிய புன்னகையோடு அதனை ஏற்றுக் கொண்டார் .

சில மாதங்கள் கழித்து மீண்டும் வேறொரு நிகழ்வுக்காக , நாமக்கல் போனபோது அவரது அன்பு மைந்தர் வந்தழைத்தார் ஆண்டவர் & கோ என்னும் அவர்களது நிறுவனத்திற்கு ....

 அன்று புதிதாக விற்பனைக்கு அறிமுகம் ஆன இரு சக்கர வாகனத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் .

அன்பும் , பண்பும் , தேச பக்தியும் , வணிக நேர்மையும் 
மிக்க மனிதர் எம் . கே . வீ .

இப்படி மனிதர்கள் ஊருக்கு நாலு பேர் இருந்தால் ஊர் சிறக்கும் .

எம் . கே . வீ .க்கு எனது பணிவான அன்பும் , வணக்கமும் .