Friday, May 4, 2018

42 பி எல் , எப் தெருவில் இருந்து ...

அவன் எனது நண்பன் , தோழன் .
எனது தொழிற்சங்க , கலை இலக்கியப் பணிகளைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தவன் .
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன் .
மனிதர்களை அவர்களது நிறைகளோடும் , குறைகளோடும் ஏற்றுக்கொள்ளத் தெரிந்தவன் ... மென்மையாகப் பேசுகிறவன் ....

எல்லாவற்றிற்கும் மேலாக ஓவியன் .
எங்கள் சங்க அலுவலகம் தாண்டித் தான் அவன் பணியாற்றிய பள்ளி இருந்தது .
மாலையில் பள்ளி முடிந்து , வீட்டுக்குப் போகிற வழியில், எங்கள் சங்க அலுவலகம் வந்து போவது அவன் வழக்கம் .

அப்படி ஒருமுறை வந்தபோது , என்னை அவன் வரைந்த ஓவியம் இது .
அவன் அன்பு நண்பன் அழகர்சாமி .
நாங்கள் அழகு என்று தான் எப்போதும் அழைப்போம் .

அவன் உண்மையிலும் அழகு தான் .