Saturday, May 5, 2018

புதியதலைமுறை விருது விழாவில் ...

இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவிற்கு
நீங்கள் வரவேண்டும் என்று புதியதலைமுறையில்
இருந்து அழைத்தார்கள் .

வருகிறேன் ... ஆனால் நான் யாருக்கு விருது தரப் போகிறேன்
என்பது எனக்கு சொல்லப்பட வேண்டும் .

அதை விடப்  , பெற்றுக்கொள்ளுகிறவருக்கு ,
என்னிடம் அதை பெறுவதற்கு சம்மதமா என்றும் கேட்க வேண்டும்
என்று இரண்டு நிபந்தனைகள் விதித்தேன் .

சரி ... அரை மணி நேரம் கழித்து அழைப்பதாகச் சொன்னார்கள் .
அப்படியானால் , நம்மை அழைக்க மாட்டார்கள் என்று நம்பினேன் .

அரை மணி நேரம் கழித்து அழைத்தார்கள்.
விருது பெறுகிறவர் இசைவு தெரிவித்து விட்டார் .
இனி நீங்கள் சொல்லுங்கள் என்றார்கள் .
யாரென்று கேட்டேன்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பிற்கு என்றார்கள் .
மகிழ்ச்சி , சம்மதம்  என்றேன் .