Tuesday, November 13, 2012

உன்னால் மட்டும் தான் முடியும் . . . .


ழுதாமல்,
பார்க்காமல் ,
பேசாமல்,
குறுந்தகவல் இல்லாமல் . . . .
உன்னால் முடியும் .

ன் பேதமைகளைப்
புன்னகையால் அரவணைக்க ,
நாணி என் நடு மார்பில்
முகம் புதைக்க ,
பேரின்ப அருஞ் சுனைகளில்
தாகம் தீர்க்க ,
பிரிவின் தணலில் தனியே
உருக்கிப் பார்க்க . . . .
உன்னால் முடியும் .

ன்னை  நினையாமலிருக்கிற
பொய்மையை வெயிலாகவும் ,
என்னையே நினைந்துருகும் ,
மெய்மையை மழையாகவும்
கொட்டி விரித்துக் குறிப்புணர்த்த . . . .
உன்னால் முடியும் .

ன்னையே  நான்
நினைந்து ,நினைந்து ,
நனைந்து  ,நனைந்து
கரைந்து , கரைந்து ,
உன்னுள்
கலந்து , கலந்து போவதையும்
உணர்ந்தறிய . . . .
உன்னால் முடியும் .

ன்னால் மட்டும் தான் முடியும் . . . .

_ பாரதி கிருஷ்ணகுமார்

5 comments:

ilangovan thayumanavar said...

பல நூறு பரிமாணம் தொட்டபின்பும்-
பல் ஆயிரம் கவிதைகளை யாத்த பின்பும்,
மறுபடியும் மறுபடியும் உயிர்ப்போடு-
மகத்தான காதல் மொழி தவிப்போடு,
ஊன் உருக உயிர் மருகச் சொல்வதற்கு
உன்னால் மட்டும்தான் முடியும் நண்பனே..

vimalanperali said...

நல்ல கவிதை,மனம் உருகச்செய்கிறது.

பத்மா said...

nice one

Anonymous said...

mudiuma

Unknown said...

அருமை நண்பரே

Post a Comment