Saturday, November 3, 2012

சங்கே முழங்கு

 க்டோபர் பத்தாம் தேதி காலை நீதிபதி பஷீர் அஹமது மகளிர் கல்லூரி நடத்திய "எல்லோருக்கும் கல்வி " என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது . இதில் பங்கு பெறும் நோக்கத்துடன் எனது வெளிநாட்டுப்பயணத்தின் நிகழ்ச்சி நிரல்களை மாற்றி அமைத்துக் கொண்டேன் . ஏனெனில் "எல்லோருக்கும் கல்வி "என்பது நமக்கு எப்போதும் ஒரு தீராதமுழக்கம் . அது கோடிக்கணக்கான இந்தியக் குழந்தைகளின் கோரிக்கை . அதை நாம் சாத்தியப் படுத்தியாக வேண்டும் .

சுதந்திர இந்தியா தன் நாட்டு மக்களுக்கு இழைத்த அநீதிகளில் மிக , மிக
முதன்மையான அநீதி , அது தன் குழந்தைகளுக்குக் கல்வி தரத் தவறியது .
இப்போதும் அந்த அநீதி தொடர்கிறது . இது போன்ற கருத்தரங்குகள் மிக அதிக அளவில் , மிக விரிவாக நடத்தப் பட வேண்டும் .

முன் முயற்சி எடுத்த நீதிபதி பஷீர் அஹமது மகளிர் கல்லூரியின் தமிழ் துறை நமது பாராட்டுக்குரியது . கருத்தரங்கின் சிறப்பம்சம் அதில் பங்கு பெற வாய்ப்பளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் . அடுத்த தலை முறையை , நமக்குப் பின்னே கருத்துச் செறிவுடன் களத்தில் நிறுத்த வேண்டியது தான் நமது கடமையும் , நமக்குள்ள சவாலும் .

வணப்படம்  அங்கு திரையிடப்பட்டது . அனைவரும் கண்டு களித்தார்கள் என்று சொல்ல முடியாது . ஆனால் பெரும்பான்மையான பங்கேற்பாளர்கள், முழு ஈடுபாட்டுடன் பார்த்தார்கள் .

துரையில், இருந்து இயங்கும் மனித உரிமைக் கல்வி நிறுவனம் தயாரித்து ,எனது இயக்கத்தில் உருவான "எனக்கு இல்லையா கல்வி ?" கடந்த ஆண்டு ஜூலையில் வெளியானது . இந்தப் பதினைந்து மாதங்களுக்குள் அது பல நூறு பள்ளிகள் , கல்லூரிகள் , ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், ஆசிரியர்களுக்கான பல முகாம்களில் திரையிடப்பட்டு இருக்கிறது . மிக ஆழமான , விரிவான விவாதங்களும் நடந்ததாகப் பலரும் உறுதி செய்தனர் .

நாமும் , நமது பங்குக்கு சங்கை ஊதி வைக்கலாம் என்று செய்த வேலை அல்ல இது . இது பாரதியின் சங்கு ... பாரதிதாசனின் சங்கு ... பட்டுக்கோட்டையின் சங்கு .... களத்தில் படையணிகளை, சட்ட ரீதியான போருக்கு அணிவகுக்கும் சங்கு . சங்கே முழங்கு !

No comments:

Post a Comment