Thursday, November 19, 2020

"இருப்பிடம்"

கழுத்தறுத்தாய்
பின்னிருந்து...
நீ அறுப்பதற்கு இசைவாகக் கழுத்தை சாய்த்துக் கொடுத்தேன் என்பது உனக்குத் தெரியுமா ?
நீ பற்றிக்கொண்டு போவதற்கு ஏதுவாக
நொடிகளின் இடைவெளிகளின் இடைவெளிகளில்
என் தலைமுடி வளர்ந்தது உனக்குத் தெரியுமா ?
சிந்துகிற குருதி உன் கால்களில் பட்டுவிடக் கூடாதென்பதற்காக அறுபட்ட கழுத்தின் தசைகள் துடித்தது உனக்குத் தெரியுமா ?
நீ அறுப்பதற்கு முந்தைய கணங்களிலேயே
என் சிந்தனையின் இருப்பிடத்தை
இடம் மாற்றிக் கொண்டது உனக்குத் தெரியுமா ?
கழுத்தறுபட்ட பின்னும் கைகள் எழுதுவதைப்
பார்த்திருக்கிறாயா?
பார்.

-ப்ரகலாதன்
(பாரதி கிருஷ்ணகுமார் )

No comments:

Post a Comment