Monday, September 28, 2020

எழுச்சித் தமிழருடன் ...

இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு எனது கதை, திரைக்கதை, உரையாடல் மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம் “என்று தணியும்” 

வேல் புரொடக் ஷன்ஸ் சார்பில் அத்திரைப்படத்தைத் திருப்பூர் யுனிவர்சல் திரையரங்க உரிமையாளரும், நான் எப்போதும் அப்பா என்று மதிப்புடனும் பணிவுடனும் அழைக்கும் திரு. கே.பழனிசுவாமி அதைத் தயாரித்திருந்தார். 

முற்றிலும் புதுமுகங்களே நடித்த திரைப்படம். 

படத்தில் ஒருவருக்கும் ஒப்பனை கிடையாது. 

அது உண்மைக் கதை அல்ல, உண்மைகளின் கதை.

தமிழில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகப் பேசிய முதல் திரைப்படம்.

உடுமலை சங்கர், தர்மபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ் போன்ற ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு, இத்திரைப்படத்தை சமர்ப்பிக்கிறோம் என்று நாங்கள் தந்த விளம்பரத்தை எந்த நாளிதழும் வெளியிடவில்லை, தீக்கதிர் தவிர..

அந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு  வந்து சிறப்பிக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழரை நேரில் சந்தித்து அழைத்தேன். 

இலங்கையில் இருந்து அவர் எடுத்து வந்த ஆவணப்படத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் மதிப்புமிகு வாய்ப்பை, எனக்கு மிக முன்னதாகவே அவர் தந்திருந்தார்.

நண்பர்களோடும் தோழர்களோடும் வந்திருந்து சிறப்பித்தார். 

திரைப்படத்தைப் பார்த்தார். மனம் திறந்து பாராட்டினார்.

இத்தருணத்தில் அவர் தந்த அங்கீகாரத்திற்கு மனமார்ந்த நன்றி பாராட்டுகிறேன்.






2 comments:

Raja Mutthirulandi said...

அறியப் பெருகுவது மகிழ்ச்சி.

Raja Mutthirulandi said...

அறியப் பெருகுது மகிழ்ச்சி.
பெருகப் பெறுக இன்னும் பெருமை.

Post a Comment