Tuesday, September 22, 2020

மருத்துவர் ச. இராமதாசு அவர்களுடன்...

 மதுரையில் இருந்து  இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகத்தின் வழிகாட்டுதலில், மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கிய ஆவணப்படமே “எனக்கு இல்லையா கல்வி..?” 

கல்வி குறித்த ஆவணப்படங்களில் தலை சிறந்தது எனப் பேராசிரியர் ச. மாடசாமி அவர்களால் பாராட்டப் பெற்ற ஆவணம்.

ஆவணப் படத்திற்கென சாட்சியம்  அளிக்குமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மதிப்பிற்குரிய மருத்தவர் ச.இராமதாசு அவர்களைக் கேட்டுக்கொண்டோம்.

தயக்கமின்றி இசைவு அளித்தார். தரமான சாட்சியம் அளித்தார். கல்வி தொடர்பாக மிகுந்த காத்திரமான சிந்தனைகளோடு உரையாடினார். 

அவரைச் சந்தித்த கணங்கள் முக்கியமானவை. 

சந்திப்பை சாத்தியப்படுத்தி, உடனிருந்து ஒத்துழைத்து உதவினார் அருமை நண்பர் கவிஞர். ஜெயபாஸ்கரன்.

இணைந்து பணியாற்றினார் நண்பர் ஷ்யாம்.


v



No comments:

Post a Comment