புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி போகிற வழியில் , புதுக்கோட்டை நகரத்துக்கு அருகில் இருக்கிறது கைக் குறிச்சி கிராமமும் , பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியும் . போன மார்ச் மாதம் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவுக்குப் போனேன் . விழா சிறப்பாக இருந்தது . எளிய , நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பயிலும் கல்லூரி . நன்கு , ஆழ்ந்து கேட்கும் ஆற்றலை மாணவிகளிடத்தில் உருவாக்கி இருந்த ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள் ..கல்லூரியின் நிறுவனரும் .தாளாளருமான திரு. தனசேகரன் மனம் கனிந்த அன்புடன் உபசரித்தார் . அவருக்கு தனித்த நன்றி சொல்ல வேண்டும் . விழாவிற்கு புதுகை இளங்கோ,
கவிஞர் இரா .தனிக்கொடி , ரமா. ராமநாதன், ஒளிப்பதிவாளர் செல்வா என நீண்ட நாள் நண்பர்கள் வந்து மேலும் களிப்பூட்டினார்கள் .
இவ்வளவு சிறப்புகள் இருந்தும் ஒரு குறை இருந்தது .... மகளிர் தின விழா மேடையில் ஏகதேசமாக ஒரு பெண் கூட இல்லை . ஆண்கள் இன்னும் திருந்த வேண்டியதிருக்கிறது . என்னையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன் .
இந்த ஆண்டில்கலந்து கொண்ட எல்லா நிகழ்வுகள் குறித்தும் எழுதணும் என்று ஆசை . ஆசைக்கா பஞ்சம் ?...
1 comment:
very nice
Post a Comment