Wednesday, September 12, 2012

தினமணிக்கு நன்றி

மகாகவி பாரதியின் நினைவைப் போற்றும் பொருட்டு, மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதி நினைவு நாள் இலக்கிய நிகழ்வில் விழா பேருரை ஆற்றும் பெரும் பேறு கிட்டியது.

மாணவர்கள் விழாவில் பங்கேற்ற விதமும், அவர்களது கேட்கும் திறனும் பாராட்டுதலுக்குரியவை.















விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாகத் தரும் பாக்கியமும் கிட்டியது.

பாரதி பற்றி மதுரையில் பேசியது மகிழ்ச்சிக்குரியது.

ஒரு  பள்ளியில் பேசியது அதனினும் மகிழ்ச்சிக்குரியது.


நிகழ்வில் பேசியதில் இரண்டு ஆதாரமான குறிப்புகளை
தினமணியின் மதுரைப் பதிப்பு வெளியிட்டு,
மேலும் பெருமை சேர்த்தது.

தினமணிக்கு நன்றி.
 எல்லாப் புகழும் பாரதிக்கு...

No comments:

Post a Comment