Wednesday, February 19, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... மூன்றாம் நாள்

இனிதே துவங்கியது மூன்றாம் நாள் நிகழ்வுகள் .

காலை ஒன்பதரை மணிக்கே அரங்கம் நிறைந்து இருந்தது .

ஒரு  ஞாயிறு காலை குறித்த நேரத்தில் விழா துவங்குவதையும் , கேட்போர் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே குழுமி இருந்ததும் வியப்பு அளிக்கும் உண்மைகள் என்பதை தமிழ்நாட்டில் ஒப்புக்கொள்வார்கள் என்றே நான் நம்புகிறேன் .

இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்பதைத் தனியே சொல்லுவது அவசியமில்லை .

கவிநய அரங்கிற்குத் தலைமை ஏற்று , சிறந்ததொரு உரை நிகழ்த்தினார் திருமதி . பாரதி பாஸ்கர் .

தொடர்ந்து நான்கு ஆளுமைகள் , அழகிய விதத்தில் தங்கள் தலைப்புகளில் கம்பனைச் சாறு பிழிந்து சுவை சேர்த்தார்கள் .

இறுதியாக என் முறை வந்தது .

ஏறக்குறைய உணவு இடைவேளை நெருங்கிக்கொண்டு இருந்தது .

கம்பனில் காதல் என்பது தலைப்பு ...

கம்பனே காதலால் தான் காப்பியம் படைத்தான் என்று துவங்கினேன் .

ஆசை பற்றி அறையலுற்றேன் என்று கம்பன் அவையடக்கத்தில் பாடுவதும் அது தானே ....

உணவு இடைவேளை கடந்தும் பேசும் அனுமதி கிடைத்தது .

எமது மொழியின் மீதும் , கம்பனின் மீதும் கொண்ட காதலால் அரங்கம் கசிந்துருகி நின்றது .

எல்லோரும் காதலாகி இருந்தோம் .

வேறு பணிகள் காரணமாக நான் மாலை நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை .


... நான்காம் நாள்