Thursday, January 9, 2014

விகடனுக்கு நன்றி

ஆனந்த விகடன் வழங்கும் "இன்று ஒன்று நன்று " என்னும் நிகழ்வில் இரண்டாம் முறையாகப் பேசி இருக்கிறேன் .

இன்றைய ஒலிபரப்பில், அண்மையில் அமரரான இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறித்துப் பேசி இருக்கிறேன் .வாய்ப்பு இருக்கிறவர்கள் கேளுங்கள் .

நான் எப்போதும் இதனைக் கேட்கிற வழக்கம் உடையவன் .
நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்புள்ள பகுதி .

மூன்று நிமிடத்திற்குள் பேசி முடிக்க வேண்டுமென்பது அசலான சவால் . எனவே அது பெரும்பாலும் சுண்டக் காய்ச்சிய பால் போல செறிவாக , சுவையாக அமைந்து விடுகிறது .

விகடனுக்கு நன்றி .


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தள அறிமுகம்...

இங்கு --> http://manakkuthirai.blogspot.com/2014/01/bharathi-krishnakumar-speech-in-kangayam.html

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Ponra said...

கேட்டேன் நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் குரலை ...

Post a Comment