Saturday, November 16, 2013

வாழ்தல் என்பது ...



எங்காவது , எதற்காவது ஒரு வரிசையில் சென்று கடைசி ஆளாக நிற்கும் போது அடி மனதில் ஒரு அவநம்பிக்கை தோன்றுகிறது . அடுத்த அரை மணி நேரத்தில் நமக்குப் பின்னால் ஒரு பத்துப் பேர் வந்து நின்றதும் அதே அவநம்பிக்கை , நம்பிக்கையாகத் தானே உருமாற்றம் கொள்ளுகிறது


இந்த மாற்றத்தை அறிவு தருகிறதா அல்லது மனம் தானே உருவாக்கிக் கொள்ளுகிறதா ? துல்லியமான விடை தட்டுப்படவில்லை.


மனமோ , அறிவோ ... எல்லாவற்றிலும் அதன் நுட்பம் என்னவென்று அறிந்து கொள்ளுகிற போராட்டமே ... வாழ்தல் என்றாகிறது 

No comments:

Post a Comment