தனது ஆசிரியரைத் தேடிக் கண்டு பிடித்து இந்த விழாவுக்கு அழைத்து வந்திருந்தான் சென்றாயன் .
அவரைப் பற்றிய அவனது நினைவுகளை இந்தப் பத்திக்கு கீழே அவனே எழுத வேண்டும் என நான் விரும்புகிறேன் . அவன் எழுதாவிட்டால் அப்புறமாக நானே எழுதத் தான் வேண்டும்
தனக்கு எழுதக் கற்றுக் கொடுத்தவரை , தனது கவிதை நூலைப் பெற்றுக் கொள்ள அழைத்த அந்தப் பேரன்பு எனக்கு மிகுந்த உவகை அளித்தது .
நூலை வெளி இடுகிற மகிழ்வும் , மிகத் தகுதியான ஒருவரிடம் முதல் பிரதியைத் தருகிறோம் என்கிற பெருமிதமும் மனதுள் கூடிக் கொண்டது .
எல்லாம் நண்பன் தந்த அன்பு , அங்கீகாரம் , அற்புதம் , பெருமிதம் .
நான் ஒரு அழகிய மஹா கவி பாரதியின் திரு உருவப் படத்தை என் நண்பனுக்குப் பரிசளித்தேன் .
No comments:
Post a Comment