Wednesday, November 14, 2012

அமைவதெல்லாம் . . . .

து ஒரு தீர்க்கதரிசனமான கவிதை .
நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்கு முன்பு எழுதப்பட்டது .
" கருப்பு ஆட்சிக்கு வரும் - இன்று
 அந்தியிலும் , நாளை
  ஆப்பிரிக்காவிலும்". இந்தக் கவிதையை எழுதியதால் எனக்கு அறிமுகமான கவிஞன் தான் தங்கம் மூர்த்தி. அன்று தொடங்கிய நட்பு , துருப்பிடிக்காமல் இப்போதும் தொடர்கிறது .


டந்த  மார்ச் மாதம் ஒரு நாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து,
"திருச்சியில், ரோட்டரி மாநாடு ஒன்று நடக்கிறது. நீங்க பேச வரணும்' என்றான். அவன் அழைத்ததால் ஒப்புக் கொண்டேன். அது தொடர்பாக, விழாக் குழு சார்பில் கரூரில் இருந்து ரமேஷ் பேசுவார் என்றான்.
ரமேஷும் பேசினார். எல்லாம் சரியாகத்தான் நடந்தது .


னால், விழாவுக்கு முதல் நாள் கடும் உடல் நலக் குறைவாகி ,சுருண்டு படுத்துக் கொள்ளும்படியாகி விட்டது.
திருச்சிக்குப் போக முடியவில்லை.
விழாவன்று காலை ரமேஷ் கூப்பிட்டார் . நண்பன் சதீஷ் செல்லையா தான் அவரோடு பேசினான். நான் பேசுகிற நிலையில் இல்லை.
"கடைசி நேரத்துல இப்பிடி செஞ்சா எப்பிடி ? எப்பிடியாவது அவர்
வரணும்" ... என்று கோபமாகத் துவங்கி ... " சரி.. அப்ப .. அவரு வர மாட்டாரு" என்று வெறுப்போடும், சலிப்போடும் உரையாடலை ரமேஷ் முடித்துக் கொண்டதாக சதீஷ் பிறகு சொன்னான்.
சிறிது குணமான பிறகு, என்னால் வர இயலாது போனது குறித்து ரமேஷுடன் பேச வேண்டும் என்று பத்திருபது முறை நினைத்துக் கொண்டேன்.
ஆனால் பேசவில்லை.


மூன்று மாதங்கள் கழித்து, ஒரு நாள் கரூரில் இருந்து ரமேஷே அழைத்தார். இம்முறையும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார். எவ்வளவு பெருந்தன்மை ... எவ்வளவு நம்பிக்கை.
உடல் நலத்தில் பெரிதாக மாற்றம் இல்லாத போதும் ஒப்புக்கொண்டேன்.
இந்த முறை நிகழ்ச்சிக்குப் போகிற அன்று உடம்பு படுத்தாது என்கிற மனக் கணக்கு. சண்முக வள்ளி என்றொருவர் பேசுவார் என்றார் ரமேஷ் .


ANGELS OF KARUR என்பது அந்த மகளிர் ரோட்டரி அமைப்பின் பெயர். அதன் CHAIR PERSON சண்முக வள்ளி. ரொம்ப அளவாக, செறிவாகப் பேசினார்.
நான் சொன்ன தலைப்புகளில் சிறந்ததைத் தேர்வு செய்தார்.
புகைப்படம், தன்  விவரக் குறிப்பு அனுப்பச் சொன்னார்.
பயணச் சீட்டுகள் அனுப்பினார்.  எல்லாம் முறையாக, சரியாக குறும் செய்திகள்  மூலமே செய்தார். ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நிகழ்ச்சி என்று முடிவு.


நான்காம் தேதி நள்ளிரவே கரூர் போய் சேர்ந்தேன், தங்கி இருந்த விடுதியில் தான் கூட்ட அரங்கு. காலை சரியாக  நிகழ்வைத் துவக்கினார்கள் . குத்து விளக்கு ஏற்றச் சொன்னார்கள். இரண்டு ஐந்து முக விளக்குகள். பத்துப் பேர்  ஆளுக்கொரு முகமாக விளக்கேற்றினோம். இரண்டாவது வரிசையில் ஒரு இடம் இருந்தது. அமர்ந்து கொண்டேன். யாரும் மேடைக்கு அழைக்கவில்லை. சந்தோசமாக இருந்தது.

ன்றைய நிகழ்வில், மொத்தம் மூவர் பேசுவதாக ஏற்பாடு. மற்ற இருவர் பேசுவதைக் கேட்க வேண்டுமென மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
இருவர்  பேச்சும் மறக்க முடியாத அனுபவங்கள் .
ஒருவர் கலா பாலசுந்தரம்  (Alert , Chennai )
மற்றொருவர் முனைவர் . நேருஜி  ( Banglore)





சேவையின் மகத்துவத்தை , அது செயல் வடிவம் பெறுகிற  இயக்கங்களின் கூட்டுணர்வை  இருவரும் எளிய சொற்களில் , பாசாங்கு இல்லாமல் பரிமாறினார்கள் . அடுத்து பேச வேண்டும்  என்பதை மறந்து கேட்ட உரைகள் . இருவரது உரைகளும் பெருங் கனவுகள் .


ன்னைப் பேச அழைத்தார்கள் . மனதில் கூடி இருந்த உற்சாகம் சொற்களில் பெருக்கெடுத்தது .வியர்வை பொங்கி வழிந்தது . சிறப்பாகப் பேசினேன் என்று  பிறகு  எல்லோரும் சொன்னார்கள் .



மிக , மிக முன்னதாக ஒத்திகை பார்க்கப்பட்ட சிறந்த நாடகம் போல அந்தக் கருத்தரங்கு  அமைந்திருந்தது . நிகழ்வுக்கான  Chair person சண்முக வள்ளி அனைத்தையும் நேர்த்தியாக , திறம்பட , வடிவமைத்திருந்தார் . அவரது ஆளுமையும் , தலைமைப் பண்பும், மதிப்பிற்கும் , பாராட்டுதலுக்கும் உரியது .



மேஷ் என்னை சாப்பிட அழைத்துப் போனார் . உணவு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்தார் ரவிக்குமார் . ரமேஷ் அறிமுகம் செய்தார் . " சண்முக வள்ளி இருக்காங்கள்ள ... அவங்க வீட்டுக்காரர் ". அறிமுகம் செய்து கொண்டோம் . நன்கு , நின்று , பார்த்து உபசரித்தார் . எல்லோரையும் அதே போல பார்த்துக் கொண்டார் .
" ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் " என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் ,
"ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பக்கத்திலேயேயும்  ஒரு ஆண் துணை நிற்கிறான் " . தகுதி மிக்க பெண்கள் அதனைக்  கூடுதல் திறமையாக உயர்த்திக் கொள்கிறார்கள் .
ஆகஸ்ட் ஐந்து  மறக்க முடியாத நாளாகி விட்டது .
தங்கம் மூர்த்தி , ரமேஷ் , ரவிக்குமார் , ராஜாத்தி , என் . ஷண்முக வள்ளி என  எல்லோருக்கும் நன்றி .  ரோட்டரி மாவட்ட ஆளுநர் குமணனுக்கு நன்றி .


லைமைப் பொறுப்பாளர் சண்முக வள்ளிக்கு , அவர் அளித்த மகத்தான வாய்ப்பிற்காக எனது தனித்த நன்றி .
karur angels என்று தான் சொன்னார்கள் . ஆனால் அசுரத்தனமான ஏற்பாடுகள் .
அமைப்பாளர்கள் , அரங்கம் , பங்கேற்பாளர்கள் ,பேச்சாளர்கள் , உபசரிப்பு , உணவு , நேரக் கட்டுப்பாடு , நினைவுப் பரிசு ... என எல்லாமே அமைந்திருந்தது .
இப்படி " அமைவதெல்லாம் " அபூர்வமானது .






Tuesday, November 13, 2012

என்னால் ஒரு போதும் முடியாது . . . .


ழுதாமல்,
பார்க்காமல் ,
பேசாமல் ,
குறுந்தகவல் இல்லாமல் . . . .
என்னால் முடியாது .

ன் உளத் தூய்மையின்
நறுமணத்தை நுகராதிருக்க ,
மடியில் தலை சாய்த்துக் கண் மூடிக்
களிப்பின் சிகரம் தொடாதிருக்க ,
ஒவ்வொரு விரலாய் முத்தமிட்டு , முத்தமிட்டு
மோகத்தில் மூர்ச்சை ஆகாதிருக்க ,
பிரிவின் பெருங் கனத்தைக் காலத்தின்
கோலமென்று கணக்குத் தீர்க்க . . . .
என்னால் முடியாது

ன்னையே நினைந்துருகும்
பிரிவின் கடுங் காய்ச்சலை ,
உன்னையே உடனிருத்திக் களமாடும்
கனவின் உறக்கமற்ற சூறாவளியை . . . .
எதிர் கொண்டு நிற்க
என்னால் முடியாது .

ன்னையே
நினைந்து , நினைந்து
நனைந்து , நனைந்து ,
கரைந்து , கரைந்து ,
என்னுள்
கலந்து , கலந்து போவதை ,
எங்கிருந்தோ நீ  நிகழ்த்துவதைத்
தாங்கிக் கொள்ள . . . .
என்னால் ஒரு போதும் முடியாது .

கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி

Photo: காலையில் எழுந்ததும்,எங்கோ ஒரு தொலைக்காட்சியில் , கல்யாணப்பரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய " உன்னைக் கண்டு நானாட , என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப  தீபாவளி ..." என்ற பாடல் தொலைவில் ஒலித்தது .

இந்தப் பாடல் இல்லாமல், தீபாவளி கடந்து  போவதில்லை . ஆனால் பாடலைக் கேட்கிறபோதேல்லாம் , அறமும் , அறிவும் , உணர்வும் கலந்து குழைத்து எழுதிய அருமைத் தோழன் கல்யாணசுந்தரத்தின் இள வயது மரணம் மனமெங்கும் வெடித்துச் சிதறுகிறது. தீபாவளி முடிந்த மறு நாள் காணக் கிடக்கும் , வீட்டு வாசலைப் போலாகி விடுகிறது உள்ளம் . 

உலக சினிமாவின் வரலாற்றில் , உழைப்பவனின் குரலை முதலில்  பாடிய "காலமறிந்து கூவிய சேவல்" கல்யாணசுந்தரம் .

அவர் நினைப்பு வருகிறபோதெல்லாம் , அடி மனதில் அகக்  கண்கள் சிவந்து கலங்குவதை இன்று தான் இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ளுகிறேன் .

பிரிவின் வலி தான் உலகின் ஆகப்பெரிய்ய்ய்ய...
 வலி . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அதிகாலையில்  எழுந்ததும்,எங்கோ ஒரு தொலைக்காட்சியில் , கல்யாணப்பரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய " உன்னைக் கண்டு நானாட , என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி ..." என்ற பாடல் தொலைவில்ஒலித்தது .

ந்தப் பாடல் இல்லாமல், தீபாவளி கடந்து போவதில்லை . ஆனால் பாடலைக் கேட்கிறபோதேல்லாம் , அறமும் , அறிவும் , உணர்வும் கலந்து குழைத்து எழுதிய அருமைத் தோழன் கல்யாணசுந்தரத்தின் இள வயது மரணம் மனமெங்கும் வெடித்துச் சிதறுகிறது. தீபாவளி முடிந்த மறு நாள் காணக் கிடக்கும் , வீட்டு வாசலைப் போலாகி விடுகிறது உள்ளம் .

லக சினிமாவின் வரலாற்றில் , உழைப்பவனின் குரலை முதலில் பாடிய "காலமறிந்து கூவிய சேவல்" கல்யாணசுந்தரம் .

வர் நினைப்பு வருகிறபோதெல்லாம் , அடி மனதில் அகக் கண்கள் சிவந்து கலங்குவதை இன்று தான் இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ளுகிறேன் .

பிரிவின் வலி தான் உலகின் ஆகப்பெரிய்ய்ய்ய...
வலி . . . .
 
 
_ பாரதி கிருஷ்ணகுமார் 
அதி காலையில்

இல்லாதவர்க்கும் இருக்கும் தீபாவளி

தீபாவளி கொண்டாடுகிற எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் .
இந்த ஆண்டு தீபாவளி "இல்லாத" எல்லோருடனும் மனத்தால் நான் உடனிருக்கிறேன் .
யார் யாரைக் கொன்றதால் தீபாவளி என்பதில் நிறையக் கதைகள் புகுந்து கொண்டன .
கொல்லப்பட்டது நரகாசுரன் . சரி ...
கொன்றது யார் ?
கிருஷ்ணனா ... சத்ய பாமாவா ... சக்தியா ...

ந்தக் கதைக் குழப்பத்தை விட முக்கியமான உண்மை... தேவர்களும் , அசுரர்களும் இணைந்து மனிதர்களைக் கொல்லும் பண்டிகையாகி விட்டது இந்த இனிய தீபாவளி.

சென்னையின் பிரம்மாண்டமான துணிக்கடை வாசலில் தன் மகளிடமும் , மகனிடமும் இருக்கிற காசுக்குள் துணி எடுத்துக் கொள்ளுமாறு மன்றாடிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதான தாயின் வயோதிகக் கண்களும் , அதில் திரண்டிருந்த கண்ணீரும் எந்தப் பண்டிகையையும் கொண்டாட விடாது . கொண்டாட முடியாது .



பாரதி  கிருஷ்ணகுமார்

உன்னால் மட்டும் தான் முடியும் . . . .


ழுதாமல்,
பார்க்காமல் ,
பேசாமல்,
குறுந்தகவல் இல்லாமல் . . . .
உன்னால் முடியும் .

ன் பேதமைகளைப்
புன்னகையால் அரவணைக்க ,
நாணி என் நடு மார்பில்
முகம் புதைக்க ,
பேரின்ப அருஞ் சுனைகளில்
தாகம் தீர்க்க ,
பிரிவின் தணலில் தனியே
உருக்கிப் பார்க்க . . . .
உன்னால் முடியும் .

ன்னை  நினையாமலிருக்கிற
பொய்மையை வெயிலாகவும் ,
என்னையே நினைந்துருகும் ,
மெய்மையை மழையாகவும்
கொட்டி விரித்துக் குறிப்புணர்த்த . . . .
உன்னால் முடியும் .

ன்னையே  நான்
நினைந்து ,நினைந்து ,
நனைந்து  ,நனைந்து
கரைந்து , கரைந்து ,
உன்னுள்
கலந்து , கலந்து போவதையும்
உணர்ந்தறிய . . . .
உன்னால் முடியும் .

ன்னால் மட்டும் தான் முடியும் . . . .

_ பாரதி கிருஷ்ணகுமார்

Saturday, November 3, 2012

சங்கே முழங்கு

 க்டோபர் பத்தாம் தேதி காலை நீதிபதி பஷீர் அஹமது மகளிர் கல்லூரி நடத்திய "எல்லோருக்கும் கல்வி " என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது . இதில் பங்கு பெறும் நோக்கத்துடன் எனது வெளிநாட்டுப்பயணத்தின் நிகழ்ச்சி நிரல்களை மாற்றி அமைத்துக் கொண்டேன் . ஏனெனில் "எல்லோருக்கும் கல்வி "என்பது நமக்கு எப்போதும் ஒரு தீராதமுழக்கம் . அது கோடிக்கணக்கான இந்தியக் குழந்தைகளின் கோரிக்கை . அதை நாம் சாத்தியப் படுத்தியாக வேண்டும் .

சுதந்திர இந்தியா தன் நாட்டு மக்களுக்கு இழைத்த அநீதிகளில் மிக , மிக
முதன்மையான அநீதி , அது தன் குழந்தைகளுக்குக் கல்வி தரத் தவறியது .
இப்போதும் அந்த அநீதி தொடர்கிறது . இது போன்ற கருத்தரங்குகள் மிக அதிக அளவில் , மிக விரிவாக நடத்தப் பட வேண்டும் .

முன் முயற்சி எடுத்த நீதிபதி பஷீர் அஹமது மகளிர் கல்லூரியின் தமிழ் துறை நமது பாராட்டுக்குரியது . கருத்தரங்கின் சிறப்பம்சம் அதில் பங்கு பெற வாய்ப்பளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் . அடுத்த தலை முறையை , நமக்குப் பின்னே கருத்துச் செறிவுடன் களத்தில் நிறுத்த வேண்டியது தான் நமது கடமையும் , நமக்குள்ள சவாலும் .

வணப்படம்  அங்கு திரையிடப்பட்டது . அனைவரும் கண்டு களித்தார்கள் என்று சொல்ல முடியாது . ஆனால் பெரும்பான்மையான பங்கேற்பாளர்கள், முழு ஈடுபாட்டுடன் பார்த்தார்கள் .

துரையில், இருந்து இயங்கும் மனித உரிமைக் கல்வி நிறுவனம் தயாரித்து ,எனது இயக்கத்தில் உருவான "எனக்கு இல்லையா கல்வி ?" கடந்த ஆண்டு ஜூலையில் வெளியானது . இந்தப் பதினைந்து மாதங்களுக்குள் அது பல நூறு பள்ளிகள் , கல்லூரிகள் , ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், ஆசிரியர்களுக்கான பல முகாம்களில் திரையிடப்பட்டு இருக்கிறது . மிக ஆழமான , விரிவான விவாதங்களும் நடந்ததாகப் பலரும் உறுதி செய்தனர் .

நாமும் , நமது பங்குக்கு சங்கை ஊதி வைக்கலாம் என்று செய்த வேலை அல்ல இது . இது பாரதியின் சங்கு ... பாரதிதாசனின் சங்கு ... பட்டுக்கோட்டையின் சங்கு .... களத்தில் படையணிகளை, சட்ட ரீதியான போருக்கு அணிவகுக்கும் சங்கு . சங்கே முழங்கு !

Friday, November 2, 2012

மழை இன்னும் நிற்கவில்லை ....

இன்று இரண்டாம் நாளாக மேலும் ஐந்து குறும் படங்களை இயக்கினேன் .
எல்லோரும் , இணக்கமாக விரைந்து வேலை பார்த்த நாள் .
ஒளிப்பதிவாளர் கேசவனும் , அவரது சகாக்களும் சிறப்பாகப்
பணி புரிந்தார்கள் .

நல்ல உணவு , அன்பான உபசரிப்பு , அன்பு ததும்பி இருந்தது
படப்பிடிப்புக் கூடம் .

எல்லாப் பணிகளும் முடிந்ததும் , எல்லோரும் மனதார விரும்பி ,
ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் .

சென்னையில் மழை நின்றிருந்தது .மனசுக்குள் மழை நிற்கவில்லை



Thursday, November 1, 2012

பாரதியிடமிருந்து ....

மழை பெய்கிறது .
ஊர் முழுதும் ஈரமாகி விட்டது .
தமிழ் மக்கள் , எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலேயே
நிற்கிறார்கள் , ஈரத்திலேயே உட்காருகிறார்கள் , ஈரத்திலேயே நடக்கிறார்கள் .
ஈரத்திலேயே படுக்கிறார்கள் ; ஈரத்திலேயே சமையல் , ஈரத்திலேயே உணவு . உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்பட மாட்டான்

மழையோடு உறவாடிய வண்ணம் ...

நேற்று ஒரே நாளில் ஐந்து குறும் படங்களை இயக்கினேன் .
எல்லாம், வணிக நோக்கில் அல்லாமல் , கல்வி புகட்டும் நோக்கில் ,
உருவாக்கப்பட்டவை .
எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களும் , நட்சத்திரங்களும் ,
இணைந்து , இணக்கமாக , மிகுந்த மகிழ்ச்சியாகப் பணியாற்றிய மழை நாள் .
மனம் மிகுந்த சந்தோசமாக இருந்த நாள் .
சிறந்த உணவு , அன்பான உபசரிப்பு ....
என்ன சொல்ல .... எல்லாமே நிறைவாக இருந்த நாள் .

மொத்தத்தில் , மனதிற்கு உள்ளேயும் மழை பெய்த நாள் .
இதற்கு மேல் எழுத அந்தரங்கம் தடுக்கிறது .
"அந்தரங்கம் புனிதமானது " என்பார் திரு. ஜெயகாந்தன் .