எனது பாரதி குறித்த ஆய்வு நூல் குறித்து கவிஞர் கரிகாலன் எழுதிய மதிப்புரை
நன்றி கரிகாலன்.
- பாரதி கிருஷ்ணகுமார்
அருந்தவப் பன்றி
-----------------------------
கலைமகளை நான் என்னதான் கிண்டல் செய்தாலும் அவள் என் மீது கடைக்கண் பதித்திருக்கவே செய்கிறாள்.நான் கண்டவுடன் காதல் கொண்ட ஆளுமை பாரதிகிருஷ்ணகுமார்
தனது" அருந்தவப் பன்றி" சுப்பிரமணிய பாரதி -நூலை அனுப்பி வைத்திருந்தார்.
கலைமகளை நான் என்னதான் கிண்டல் செய்தாலும் அவள் என் மீது கடைக்கண் பதித்திருக்கவே செய்கிறாள்.நான் கண்டவுடன் காதல் கொண்ட ஆளுமை பாரதிகிருஷ்ணகுமார்
தனது" அருந்தவப் பன்றி" சுப்பிரமணிய பாரதி -நூலை அனுப்பி வைத்திருந்தார்.
பெற்றவுடன் படிக்கத் தொடங்கினேன்.மெய் விதிர்க்க..மேனி படபடத்து நடுங்க படித்துக் கொண்டிருந்தேன்.
புயற்காற்றில்,அடை மழையில்,திக்குத் தெரியா இருளில் நான் யாருடைய கைப்பிடித்து நடந்தேனோ அந்த மகாகவி பாரதியின், வெளிச்சத்துக்கு வராத விடுபட்ட பகுதிகளை தோழர் பாரதி கிருஷ்ணகுமார் தன் ஆர்வமிகு தேடலால் கடின உழைப்பால் நம் உள்ளங்கைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
விடுதலை மனமும் கவியுள்ளமும் கொண்ட பாரதியை விதியின் கரம் சிறுவயதிலேயேப்
பிய்த்து எறிந்திருக்கிறது.
பிய்த்து எறிந்திருக்கிறது.
ஆனால் அவனது படைப்பு மனமோ அவனுக்குள் வளர்ந்த கவிச்சுடரின் வெளிச்சத்தில் அவனது திசை வழி நோக்கி முன்னேற வைத்திருக்கிறது.
ஐந்து வயதில் தாயை இழந்தான்.பதினான்கு வயதில் தந்தையை இழந்தான்.இளம் வயதில் நாடி வந்த கவிதை தேவியை சொல்லொண்ணா வறுமையால் நீங்கினான்.விருப்பமின்றி எட்டயபுரம் அரண்மனையில் காசுக்காகப் பணி செய்தான்.அதிகாரத்தின் கோட்டைக்குள் ஒரு கவி எப்படி அடங்குவான்.காசி போனான்.
அலைச்சலும்,அமைதியுமற்ற வாழ்வின் தகிப்பில் ஆறு ஆண்டுகள் கவிதை எழுத முடியாது தவித்தான்.நாயினும் கடையேன் என்றார் வள்ளலார்.தன்னை அருந்தவப் பன்றி என்கிறான் பாரதி.தவம்×பன்றி.எத்தகைய நகை முரண்.அவனது அருந்தவப் பன்றி கதை அட்டகாசமான சுய எள்ளல்.இதுவே நவீன மனம்.இக்கதை இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
அவனுடைய 'சின்ன சங்கரன் கதை' நமக்கு பாரதியின் அறியாத பரமாணங்களைக் காட்டுவது.அதன் பகுதியை தேடி இந்நூலில் பிகே இணைத்துள்ளார்.
இந்நூலை விரிவாகப் பேசவேண்டும்.பாரதியின் நேயர்கள் இந்நூலை வாசிக்காமல் பாரதியை முழுமையாக உணர முடியாது.ஒரு பலகலைக்கழகம் செய்ய வேண்டிய பணி.பாரதி கிருஷ்ணகுமார் தனியொரு மனிதராய்ச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
Bharathi Krishnakumar உங்கள் திசை நோக்கி வணங்குகிறேன்.ஒரு நவீன கவியின் அகத்தை புறவாழ்வை நானறிந்ததைவிட செம்மையுற
அறியச்செய்திருக்கிறீர்கள்.தோன்றும்போதெல்லாம் இது குறித்து எழுதிக்கொண்டிருப்பேன்.
நண்பர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல்.
#வெளியீடு-
The roots
7/4 ஏழாவது தெரு,தசரதபுரம்
சாலிகிராமம்,சென்னை-14
94442 99656
விலை ரூ 200
அறியச்செய்திருக்கிறீர்கள்.தோன்றும்போதெல்லாம் இது குறித்து எழுதிக்கொண்டிருப்பேன்.
நண்பர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல்.
#வெளியீடு-
The roots
7/4 ஏழாவது தெரு,தசரதபுரம்
சாலிகிராமம்,சென்னை-14
94442 99656
விலை ரூ 200
-கரிகாலன்