Wednesday, December 19, 2012

புத்தகக் கண்காட்சி - ஈரோடு

2009 ஆம் ஆண்டு ஈரோடு , மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழாவின்  அய்ந்தாம் நாள் நிகழ்வில் நானும் , தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு . கே . வைத்தியநாதனும் சிறப்பு விருந்தினர்கள் .

புத்தகத் திருவிழாவை சிறப்புற நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் தோழர் . ஸ்டாலின் குணசேகரன் மிகுந்த பாராட்டுக்கு உரியவர் .

அவர் புத்தகத் திருவிழாவைத் துவங்கிய ஆண்டுகளில் பதிப்பகங்களும் , பொது மக்களும் பேராதரவை அவருக்கு அள்ளித் தந்து விடவில்லை . ஒரு திருமண மண்டபத்தில் தான் முதலில் துவக்கினார் . இப்போது இடம் கொள்ளாத பெரும் மைதானங்களுக்கு அதை வளர்த்து உயர்த்தி இருக்கிறார் .
துவக்க ஆண்டுகளிலும் என்னை அழைத்து இருக்கிறார் . இப்போதும் அழைக்கிறார் .

ஆயிரக் கணக்கில் மக்களும் , நூற்றுக் கணக்கில் பதிப்பகங்களும் கூடும் அசலான திருவிழாவாகி விட்டது ஈரோடு புத்தகச் சந்தை .


தமிழகத்தின் தனிச் சிறப்பு மிக்க புத்தகத் திருவிழாக்களில் தனித்த இடம் பெற்று விட்டது ஈரோடு . அதை உருவாக்கிய பெருமை தோழர் ஸ்டாலின் குணசேகரனுக்குத்தான் .

1 comment:

hariharan said...

I heard your speech in cd, it was very nice.

Post a Comment