Saturday, November 3, 2012

சங்கே முழங்கு

 க்டோபர் பத்தாம் தேதி காலை நீதிபதி பஷீர் அஹமது மகளிர் கல்லூரி நடத்திய "எல்லோருக்கும் கல்வி " என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது . இதில் பங்கு பெறும் நோக்கத்துடன் எனது வெளிநாட்டுப்பயணத்தின் நிகழ்ச்சி நிரல்களை மாற்றி அமைத்துக் கொண்டேன் . ஏனெனில் "எல்லோருக்கும் கல்வி "என்பது நமக்கு எப்போதும் ஒரு தீராதமுழக்கம் . அது கோடிக்கணக்கான இந்தியக் குழந்தைகளின் கோரிக்கை . அதை நாம் சாத்தியப் படுத்தியாக வேண்டும் .

சுதந்திர இந்தியா தன் நாட்டு மக்களுக்கு இழைத்த அநீதிகளில் மிக , மிக
முதன்மையான அநீதி , அது தன் குழந்தைகளுக்குக் கல்வி தரத் தவறியது .
இப்போதும் அந்த அநீதி தொடர்கிறது . இது போன்ற கருத்தரங்குகள் மிக அதிக அளவில் , மிக விரிவாக நடத்தப் பட வேண்டும் .

முன் முயற்சி எடுத்த நீதிபதி பஷீர் அஹமது மகளிர் கல்லூரியின் தமிழ் துறை நமது பாராட்டுக்குரியது . கருத்தரங்கின் சிறப்பம்சம் அதில் பங்கு பெற வாய்ப்பளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் . அடுத்த தலை முறையை , நமக்குப் பின்னே கருத்துச் செறிவுடன் களத்தில் நிறுத்த வேண்டியது தான் நமது கடமையும் , நமக்குள்ள சவாலும் .

வணப்படம்  அங்கு திரையிடப்பட்டது . அனைவரும் கண்டு களித்தார்கள் என்று சொல்ல முடியாது . ஆனால் பெரும்பான்மையான பங்கேற்பாளர்கள், முழு ஈடுபாட்டுடன் பார்த்தார்கள் .

துரையில், இருந்து இயங்கும் மனித உரிமைக் கல்வி நிறுவனம் தயாரித்து ,எனது இயக்கத்தில் உருவான "எனக்கு இல்லையா கல்வி ?" கடந்த ஆண்டு ஜூலையில் வெளியானது . இந்தப் பதினைந்து மாதங்களுக்குள் அது பல நூறு பள்ளிகள் , கல்லூரிகள் , ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், ஆசிரியர்களுக்கான பல முகாம்களில் திரையிடப்பட்டு இருக்கிறது . மிக ஆழமான , விரிவான விவாதங்களும் நடந்ததாகப் பலரும் உறுதி செய்தனர் .

நாமும் , நமது பங்குக்கு சங்கை ஊதி வைக்கலாம் என்று செய்த வேலை அல்ல இது . இது பாரதியின் சங்கு ... பாரதிதாசனின் சங்கு ... பட்டுக்கோட்டையின் சங்கு .... களத்தில் படையணிகளை, சட்ட ரீதியான போருக்கு அணிவகுக்கும் சங்கு . சங்கே முழங்கு !

Friday, November 2, 2012

மழை இன்னும் நிற்கவில்லை ....

இன்று இரண்டாம் நாளாக மேலும் ஐந்து குறும் படங்களை இயக்கினேன் .
எல்லோரும் , இணக்கமாக விரைந்து வேலை பார்த்த நாள் .
ஒளிப்பதிவாளர் கேசவனும் , அவரது சகாக்களும் சிறப்பாகப்
பணி புரிந்தார்கள் .

நல்ல உணவு , அன்பான உபசரிப்பு , அன்பு ததும்பி இருந்தது
படப்பிடிப்புக் கூடம் .

எல்லாப் பணிகளும் முடிந்ததும் , எல்லோரும் மனதார விரும்பி ,
ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் .

சென்னையில் மழை நின்றிருந்தது .மனசுக்குள் மழை நிற்கவில்லை



Thursday, November 1, 2012

பாரதியிடமிருந்து ....

மழை பெய்கிறது .
ஊர் முழுதும் ஈரமாகி விட்டது .
தமிழ் மக்கள் , எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலேயே
நிற்கிறார்கள் , ஈரத்திலேயே உட்காருகிறார்கள் , ஈரத்திலேயே நடக்கிறார்கள் .
ஈரத்திலேயே படுக்கிறார்கள் ; ஈரத்திலேயே சமையல் , ஈரத்திலேயே உணவு . உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்பட மாட்டான்

மழையோடு உறவாடிய வண்ணம் ...

நேற்று ஒரே நாளில் ஐந்து குறும் படங்களை இயக்கினேன் .
எல்லாம், வணிக நோக்கில் அல்லாமல் , கல்வி புகட்டும் நோக்கில் ,
உருவாக்கப்பட்டவை .
எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களும் , நட்சத்திரங்களும் ,
இணைந்து , இணக்கமாக , மிகுந்த மகிழ்ச்சியாகப் பணியாற்றிய மழை நாள் .
மனம் மிகுந்த சந்தோசமாக இருந்த நாள் .
சிறந்த உணவு , அன்பான உபசரிப்பு ....
என்ன சொல்ல .... எல்லாமே நிறைவாக இருந்த நாள் .

மொத்தத்தில் , மனதிற்கு உள்ளேயும் மழை பெய்த நாள் .
இதற்கு மேல் எழுத அந்தரங்கம் தடுக்கிறது .
"அந்தரங்கம் புனிதமானது " என்பார் திரு. ஜெயகாந்தன் .





Monday, October 15, 2012

பாரதி பிறந்த நாள் விழா - பாரதி கிருஷ்ண குமாரின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா 11.12. 2011 ரஷ்யக் கலாச்சார மையம்

பாரதி பிறந்த நாள் விழா - பாரதி கிருஷ்ண குமாரின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா    11.12. 2011  ரஷ்யக் கலாச்சார மையம்  சென்னை


 http://www.youtube.com/watch?v=DBhdLLCn27s

Wednesday, October 3, 2012

உயர் கல்விப் பயணத்தின் முதல் நாளில்...









பாரதி நினைவு

மகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய நிகழ்வில் பங்கு பெறும், பெரும் பேறு கிட்டியது .விழாப் பேருரையாற்றும் வாய்ப்பைப் பெற்றேன் . விழா நிறைவுரையை தவத்திரு பொன்னம்பல அடிகளார் நிகழ்த்தினார் .





அரங்கம் நிறைந்த , அடர்த்தியான கூட்டம் . தகுதி மிக்க பார்வையாளர்கள் . மனம் நிறைத்த நிகழ்வு .

மிக நீண்ட காலமாகப் பார்க்காத நண்பர்களைச் சந்திக்க வாய்த்தது .
எல்லையற்ற  பழைய நினைவுகள் உறக்கம் கலைந்து நடமாடிய நாளாக அமைந்தது .வாய்ப்பளித்த தோழர்களுக்கு நன்றியும் , வணக்கமும் .

விழா குறித்த செய்தியை, தினமணி நாளிதழ் சிறப்பாக பிரசுரித்தது . அதன் தேவகோட்டை நிருபர் திரு.அறிவரசன் நேர்த்தியாகச் செய்தியை வடித்திருந்தார் . தினமணிக்கும் ,  அறிவரசனுக்கும் நன்றி .

Saturday, September 29, 2012

ஹிந்துவுக்கும், திரு கோலப்பனுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி...





நாளை வெளியாக உள்ள வாச்சாத்தி நிகழ்வு பற்றிய ஆவணத் திரைப்படம் குறித்த ஹிந்து நாளிதழின் முன்னோட்டம்.
ஹிந்துவுக்கும், திரு கோலப்பனுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி...

Wednesday, September 19, 2012

பாரதி கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா




புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி போகிற வழியில் , புதுக்கோட்டை நகரத்துக்கு அருகில் இருக்கிறது கைக் குறிச்சி கிராமமும் , பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியும் . போன மார்ச் மாதம் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவுக்குப் போனேன் . விழா சிறப்பாக இருந்தது . எளிய , நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பயிலும் கல்லூரி . நன்கு , ஆழ்ந்து கேட்கும் ஆற்றலை மாணவிகளிடத்தில் உருவாக்கி இருந்த ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள் ..கல்லூரியின் நிறுவனரும் .தாளாளருமான திரு. தனசேகரன் மனம் கனிந்த அன்புடன் உபசரித்தார் . அவருக்கு தனித்த நன்றி சொல்ல வேண்டும் . விழாவிற்கு  புதுகை இளங்கோ,
கவிஞர் இரா .தனிக்கொடி , ரமா. ராமநாதன், ஒளிப்பதிவாளர் செல்வா என  நீண்ட நாள் நண்பர்கள் வந்து மேலும் களிப்பூட்டினார்கள் .

இவ்வளவு சிறப்புகள் இருந்தும் ஒரு குறை இருந்தது .... மகளிர் தின விழா மேடையில் ஏகதேசமாக ஒரு பெண் கூட இல்லை . ஆண்கள் இன்னும் திருந்த வேண்டியதிருக்கிறது . என்னையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன் .

இந்த ஆண்டில்கலந்து கொண்ட எல்லா நிகழ்வுகள் குறித்தும் எழுதணும் என்று ஆசை . ஆசைக்கா பஞ்சம் ?...

Wednesday, September 12, 2012

தினமணிக்கு நன்றி

மகாகவி பாரதியின் நினைவைப் போற்றும் பொருட்டு, மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதி நினைவு நாள் இலக்கிய நிகழ்வில் விழா பேருரை ஆற்றும் பெரும் பேறு கிட்டியது.

மாணவர்கள் விழாவில் பங்கேற்ற விதமும், அவர்களது கேட்கும் திறனும் பாராட்டுதலுக்குரியவை.















விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாகத் தரும் பாக்கியமும் கிட்டியது.

பாரதி பற்றி மதுரையில் பேசியது மகிழ்ச்சிக்குரியது.

ஒரு  பள்ளியில் பேசியது அதனினும் மகிழ்ச்சிக்குரியது.


நிகழ்வில் பேசியதில் இரண்டு ஆதாரமான குறிப்புகளை
தினமணியின் மதுரைப் பதிப்பு வெளியிட்டு,
மேலும் பெருமை சேர்த்தது.

தினமணிக்கு நன்றி.
 எல்லாப் புகழும் பாரதிக்கு...