Wednesday, October 3, 2012

பாரதி நினைவு

மகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய நிகழ்வில் பங்கு பெறும், பெரும் பேறு கிட்டியது .விழாப் பேருரையாற்றும் வாய்ப்பைப் பெற்றேன் . விழா நிறைவுரையை தவத்திரு பொன்னம்பல அடிகளார் நிகழ்த்தினார் .





அரங்கம் நிறைந்த , அடர்த்தியான கூட்டம் . தகுதி மிக்க பார்வையாளர்கள் . மனம் நிறைத்த நிகழ்வு .

மிக நீண்ட காலமாகப் பார்க்காத நண்பர்களைச் சந்திக்க வாய்த்தது .
எல்லையற்ற  பழைய நினைவுகள் உறக்கம் கலைந்து நடமாடிய நாளாக அமைந்தது .வாய்ப்பளித்த தோழர்களுக்கு நன்றியும் , வணக்கமும் .

விழா குறித்த செய்தியை, தினமணி நாளிதழ் சிறப்பாக பிரசுரித்தது . அதன் தேவகோட்டை நிருபர் திரு.அறிவரசன் நேர்த்தியாகச் செய்தியை வடித்திருந்தார் . தினமணிக்கும் ,  அறிவரசனுக்கும் நன்றி .

No comments:

Post a Comment