Tuesday, February 18, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... இரண்டாம் நாள்

இரண்டாம்  நாள் நிகழ்வுகள் , குறித்த நேரத்தில் காலை ஒன்பதரை மணிக்குத் துவங்கியது . நடுவராகப் பொறுப்பேற்று திறம்பட அவையை வழி நடத்தினார் வழக்கறிஞர் திருமதி .கே . சுமதி .

சுழலும் சொற்போரில் பங்கேற்ற பெரும்பான்மையோர் இளைஞர்கள் .
அடுத்த தலைமுறைக்குக் கம்பனைக் கைமாற்றிக் கொடுத்தது தான் இலங்கைக் கம்பன் கழகம் செய்த மகத்தான சாதனை .

அந்த சாதனை ,தமிழ் மணம் ததும்பிக் கிடைத்த நாள் .

இரண்டாம் நாள் எனக்கு ஏதும் உரையாற்றும் பணிகள் இல்லை .
ஆனாலும் , நான் எங்கும் ஊர் சுற்றப் போகாமல் அனைவரது உரைகளையும் இருந்து கேட்டுக்கொண்டே இருந்தேன் .

எப்போதும் கற்றலிற் கேட்டலே நன்று .



.... மூன்றாம் நாள்