Wednesday, February 12, 2020

பேராசிரியர் .பாரதி புத்திரன்


கோவையில் இயங்கி வரும் " பாரதி பாசறை " 2019 ஆம் ஆண்டிற்கான பாரதி விருதுக்கு உரியவராக பேராசிரியர் . பாரதி புத்திரன் அவர்களைத் தேர்வு செய்தது .

மகாகவியை ஒரு தலைமுறைக்குக் கைமாற்றிக் கொடுத்த பெருந்தகை . விருதால் பெருமையும் , விருதுக்குப் பெருமையும் தந்தவர் .
தகுதி மிக்க பண்பாளர் .

உலகமெங்கும் இயங்கும் பாரதிக்கான இலக்கிய அமைப்புகள் , அவரை அழைத்து மகாகவி பாரதி பற்றி அவர் குழைந்து காதலாகிக் கசிந்து உருகுவதைத் தரிசிக்க வேண்டும் . 

விருது பெறும் நிகழ்வுக்காக கோவை வந்த பாரதி புத்திரனுடன் பாரதி அன்பர்கள் .




ஒரு முன்கதை

2003 ஆம் ஆண்டு அவர் எழுதிய " தம்பி நான் எது செய்வேனடா " என்னும் நூலை ஒரு பின்னிரவில் முழுமையாக வாசித்தேன் .


வாசித்து முடித்ததும் , அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன் .


"மகாகவி பாரதிக்கு  ஆண் வாரிசு இல்லை என்ற குறை உன்னால் தீர்ந்தது" என்ற வரிகளோடு அந்தக் கடிதம் நிறைவுறும் .