Thursday, February 20, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... நான்காம் நாள்

திங்கட்கிழமை . வேலை நாள் .

என்றபோதும் அரங்கம் நிறைந்தது .

அறத்தின் ஆறு என்பது பொதுத் தலைப்பு .

அறுவர் பேசினோம் .

அது கம்பன் காலத்து அறம் மட்டுமல்ல , என்றைக்கும் மாறாத , இன்றைக்கும் பயனளிக்கும் அறங்கள் .

எனக்களித்த தலைப்பில் என் பங்களிப்பைச் செய்தேன் .

கற்றறிந்த சபை களிப்புடன் வாழ்த்தியது .

மாலை அமர்வுகள் மேலும் பொலிவுடன் , திறம்பட நடந்தன .

அறிந்து உணர்ந்து ரசிக்கும் பார்வையாளர்கள் நம்மை மேலும் திறன் கொள்ளச் செய்கிறார்கள் .

நமது பொறுப்பை நமக்கு உணர்த்துகிறார்கள் .



....ஐந்தாம் நாள்