Tuesday, February 18, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... முதல் நாள்



 அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வுகள் ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது .

விழா நான்கு நாட்கள் நடைபெற்றது .

ஜனவரி முப்பத்தொன்றாம் நாள் மாலை விழா மங்கலத்துடன் விழா துவங்கியது .

இலங்கையின் சமூக வாழ்வில் , பல்வேறு துறைகளில் பங்களித்த பெருமக்களுக்கு விருது வழங்கிச் சிறப்புச் செய்தார்கள் .

ஏற்றமிகு இளைஞர் விருது பெற்றார் தம்பி தீபச்செல்வன் .
விழா மேடையில் அவருக்கு அருகில் அமரும் இனிய வாய்ப்பு அமைந்தது .

நிறைவாக முதல் நூலும் முதன்மை நூலும் என்கிற தலைப்பில் எழிலுரை நிகழ்த்தும் பெரும்பேறு வாய்த்தது .

மிகப்பெரிய அரங்கம் . நிரம்பி இருந்தது .

ஒவ்வொரு சொல்லையும் கேட்டு ,உணர்ந்து ,அறிந்து ... ஆரவாரம் செய்து அங்கீகாரம் செய்தார்கள் .

இலங்கைத் தமிழர்கள் உரையாடுவதில் மட்டுமல்ல .... உணர்ந்து கொண்டாடுவதிலும் தமிழ் மொழிக்குப் பெருமிதம் சேர்க்கிறார்கள் .

அரங்கத்தில் சரிக்கு சமமாகப் பெண்களும் , அதனிலும் சிறப்பாக இளையோரும் திரண்டிருந்தார்கள் .

விழா மேடையில் , அரங்கப் பணிகளைச் செய்து கொண்டிருந்தது முற்றிலும்  முப்பது வயதிற்கும் குறைவான இளையோரே ...

அவர்கள் அனைவருமே கம்பனை வாசிக்கிறவர்கள் என்பது மட்டற்ற மகிழ்ச்சி தந்தது . நாம் பேசுகிற போது அவர்கள் அதனை அவதானிக்கும் முறை நமக்கு , நமது பொறுப்பை உணர்த்துகிறது .


... இரண்டாம் நாள்