Tuesday, January 8, 2013

தோழர் . தொல். திருமாவளவனுக்கு நன்றி






விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் சார்பில் , கடந்த டிசம்பர் ஆறாம் தேதி சென்னையில் ஒரு சிறப்பான கருத்தரங்கம் நிகழ்ந்தது .

அருமை நண்பன் ஆளூர் ஷா நவாஸ் நிகழ்வைத் திறம்பட ஒருங்கிணைத்தான் .

பார்வையாளர்கள் பாங்குடன் பங்கேற்ற நிகழ்வாக அது அமைந்திருந்தது .

புரட்சியாளர் மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளும் , பாபர் மசூதி தகர்க்கப்பட்ட இருபதாம் ஆண்டு நினைவு நாளும் கருத்தரங்கத்தின் மையப் பொருளாக இருந்தது .

சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கும் , தலித்துகளுக்கும் இடையில் மேலும்  உருவாகி , வளர வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்த அமர்வாக அது திகழ்ந்தது .

இந்துத்துவ பாசிச இழிவுக்கு எதிராக, இந்த ஒற்றுமை மாபெரும் வரலாற்றுக் கடமையை நிகழ்த்தும் .

கீழ்மையான எதிரிகளை , ஆயுதங்களால் அன்றி அறிவினால் எதிர் கொள்ளும் தோழர் . தொல். திருமாவளவனுக்குநன்றியும் ,பாராட்டுதல்களும் .

No comments:

Post a Comment