Thursday, January 10, 2013

இன்றைக்கும் கற்றுக் கொண்டேன்...

 அருமை நண்பர் திரு . சௌமா . ராஜரத்தினம் அவர்கள் மண்டலத் தலைவராக பொறுப்பேற்று நடத்தும் இந்த மண்டலச் சந்திப்புக்கு நான் வர வேண்டுமென்று மூன்று மாதங்கள் முன்பே, என்னோடு பேசி எனது இசைவைப் பெற்று இருந்தார் .
அவருக்கும் எனக்குமான நட்பு கருதி, நானும் மகிழ்வோடு ஒப்புக் கொண்டேன் .


சிறந்த கவிஞரும் , திரைப்படப் பாடலாசிரியரும் , நண்பருமான திரு . தமிழ் மணவாளன் அவர்களுடன் விழாவிற்குப் போவது என்று மிக முன்னதாக தீர்மானமாகி இருந்தது .


 தனது கடினமான வேலைகளுக்கு இடையில் , இன்று அழைப்பிதழைத்  தந்து நேரில் அழைக்கக்  காலையில்  வந்தார் சௌமா .
அவர் வந்ததும் , நாங்கள் சந்தித்துக் கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியே தந்தது .

எனினும் அழைப்பிதழ் தருவதற்காக மணப்பாறையில் இருந்து சென்னை வந்தது ஒரு சேர வியப்பும் , சங்கடமும் தந்தது .

அழைப்பிதழ்  அஞ்சலில் வராது  இருந்தாலும் கூட , எங்கள்  நட்பின் சிறப்பு கருதி நான் அவசியம் நிகழ்ச்சிக்குப் போயிருப்பேன் .
அதனை , அவரும் அறிவார் .

என்ற போதும் , நேரில் வந்து அழைத்தது அவரது பண்பு .
நயத்தக்க நாகரீகம் .

நான்  கற்றுக் கொள்ள  நிறைய  இருக்கிறது  என்றெனக்குத் தெரியும் .
இன்றைக்கும்  கற்றுக் கொண்டேன்  என்பது  எனக்கு  மட்டுமே  தெரியும் .





No comments:

Post a Comment