Monday, January 7, 2013

தினமணிக்கு நன்றி

முன்னதாக ,திருச்சி எஸ் . ஆர் . வி . பள்ளி விழாவிற்குப் போவது குறித்த அழைப்பிதழை இங்கு இட்டிருந்தேன் . விழா மிகுந்த சிறப்பாக , நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது .

மொத்தம் நான்காயிரம் மாணவர்கள் , இரண்டாயிரம் பெற்றோர்கள் கூடி இருந்த நிகழ்வு . ஐம்பது நிமிடங்கள் பேசினேன் . ஆழ்ந்த கவனத்துடனும் , ஈடுபாட்டுடனும் செவி மடுத்தார்கள் .பேசி முடித்ததும் , எல்லோரும் தாமாக எழுந்து நின்று கரவொலி எழுப்பி எனது உரையை அங்கீகரித்தார்கள் . தலை வணங்கி அதனை ஏற்றுக் கொண்டேன் .

குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மிகுந்த , உயர்ந்த தரத்தில் அமைந்திருந்தது. முனைவர் பார்த்திபராஜாவின் இயக்கத்தில் உருவான நாடகமும் , தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த மௌன நாடகமும் தனிச் சிறப்புக்கும், பாராட்டுக்கும் உரியவை . இரண்டையும் காட்சிப் படுத்தி குறும் படங்களாகக்கினால் பெரும் பதிவாகும் . அவைகளின் உள்ளடக்கம் , சிறப்பு குறித்து பிறகு தனியே எழுதுவேன் என்று நினைக்கிறேன் .

எனது ஐம்பது நிமிட உரையின் சாரத்தைச் செய்தியாக்கிய தினமணிச் செய்தியாளர் திரு . ஜெயப்பிரகாஷுக்கு தனித்த நன்றி .
பிரசுரித்த தினமணிக்கும் நன்றி .

இந்த சிறந்த நாளுக்காகவும் , அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆக அந்தப் பள்ளியின் முதல்வர் சகோதரர் துளசிதாசனுக்கும் , பள்ளியின் நிர்வாகக் குழுவுக்கும் நன்றி சொல்வது எனது கடமையாகிறது .


ஏழு ஜனவரி 2013     21.30    சென்னை  

No comments:

Post a Comment