அதிகாலையில் எழுந்ததும்,எங்கோ ஒரு தொலைக்காட்சியில் , கல்யாணப்பரிசு திரைப்படத்தில்
இடம் பெற்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய " உன்னைக்
கண்டு நானாட , என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி ..."
என்ற பாடல் தொலைவில்ஒலித்தது .
இந்தப் பாடல் இல்லாமல், தீபாவளி கடந்து போவதில்லை . ஆனால் பாடலைக் கேட்கிறபோதேல்லாம் , அறமும் , அறிவும் , உணர்வும் கலந்து குழைத்து எழுதிய அருமைத் தோழன் கல்யாணசுந்தரத்தின் இள வயது மரணம் மனமெங்கும் வெடித்துச் சிதறுகிறது. தீபாவளி முடிந்த மறு நாள் காணக் கிடக்கும் , வீட்டு வாசலைப் போலாகி விடுகிறது உள்ளம் .
உலக சினிமாவின் வரலாற்றில் , உழைப்பவனின் குரலை முதலில் பாடிய "காலமறிந்து கூவிய சேவல்" கல்யாணசுந்தரம் .
அவர் நினைப்பு வருகிறபோதெல்லாம் , அடி மனதில் அகக் கண்கள் சிவந்து கலங்குவதை இன்று தான் இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ளுகிறேன் .
பிரிவின் வலி தான் உலகின் ஆகப்பெரிய்ய்ய்ய...
வலி . . . .
இந்தப் பாடல் இல்லாமல், தீபாவளி கடந்து போவதில்லை . ஆனால் பாடலைக் கேட்கிறபோதேல்லாம் , அறமும் , அறிவும் , உணர்வும் கலந்து குழைத்து எழுதிய அருமைத் தோழன் கல்யாணசுந்தரத்தின் இள வயது மரணம் மனமெங்கும் வெடித்துச் சிதறுகிறது. தீபாவளி முடிந்த மறு நாள் காணக் கிடக்கும் , வீட்டு வாசலைப் போலாகி விடுகிறது உள்ளம் .
உலக சினிமாவின் வரலாற்றில் , உழைப்பவனின் குரலை முதலில் பாடிய "காலமறிந்து கூவிய சேவல்" கல்யாணசுந்தரம் .
அவர் நினைப்பு வருகிறபோதெல்லாம் , அடி மனதில் அகக் கண்கள் சிவந்து கலங்குவதை இன்று தான் இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ளுகிறேன் .
பிரிவின் வலி தான் உலகின் ஆகப்பெரிய்ய்ய்ய...
வலி . . . .
_ பாரதி கிருஷ்ணகுமார்
அதி காலையில்
1 comment:
தாங்கிக்கொள்ள முடியாதவைகளுள் பிரிவின் வலியும்,துயரும்/
Post a Comment